மேலும் அறிய

இந்தியாவில் சீறிப்பாய போகும் புல்லட் ரயில்.. செம்ம அப்டேட் கொடுத்த ரயில்வே அமைச்சர்

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் பெரிய மைல்கல் படைக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதி வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.

எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

புல்லட் ரயில் திட்டம்:

இதை தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் பெரிய மைல்கல் படைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் செல்லும் வகையில் 100 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகளும் 230 கிமீ தூரத்துக்கு தூண் அமைக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இந்த பாலத்தின் மீதுதான் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 

எஃப்எஸ்எல்எம் தொழில்நுட்பம் மூலம் பாலம் அமைக்கும் பணிகளும் தூண்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது. வழக்கமாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் 10 மடங்கு வேகமாக இந்த பணிகள் நிறைவுபெற்றுள்ளது.

செம்ம அப்டேட் கொடுத்த ரயில்வே அமைச்சர்:

மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் திட்டத்தின் செயல்திறன் அதிகரித்திருப்பதை குறிப்பிட்டுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "கடந்த 21ஆம் தேதி வரை, 251.40 கிமீ தூரத்துக்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. 103.24 தூரத்துக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது" என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை குறிப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்ட கட்டுமான பணிகள் தொடங்கியது. கட்டுமான பணிகள் தொடங்கி 6 மாதத்தில் 1 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றது.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 50 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றது. வல்சாத் மாவட்டத்தில் பர் மற்றும் ஔரங்க, நவ்சாரி மாவட்டத்தில் பூர்ணா, மின்தோலா, அம்பிகா மற்றும் வெங்கனியா ஆகிய ஆறுகளின் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அகமதாபாத் வரை 500 கிமீ தூரத்தில் 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புல்லட் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget