மேலும் அறிய

"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!

ஜம்மு காஷ்மீர் மக்களின் மனதில் உள்ள வலியை அகற்றுவதே தன்னுடைய நோக்கம் என்றும் அவர்களுக்கும் தனக்கும் ரத்த பந்தம் இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும் செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும்  அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்: தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. 

இச்சூழலில், மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் தனக்கும் ரத்த பந்தம்  இருப்பதாக கூறினார்.

விரிவாக பேசிய ராகுல் காந்தி, "ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்பது பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கை. தேர்தலுக்கு முன்பே செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், பரவாயில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இது ஒரு முன்னேற்றம்.

ஜம்மு காஷ்மீர் மக்களிடம் ராகுல் நெகிழ்ச்சி: வெறுப்பின் சந்தையில் அன்பின் கடைகளைத் திறக்க மக்களை கேட்டு கொள்கிறேன். நான் ஜம்மு காஷ்மீர் மக்களை நேசிக்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இருப்பது மிகவும் பழைய உறவு. அவர்களுடன் ரத்த உறவு உள்ளது.

கூடிய விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே எங்களின் முன்னுரிமை. இந்தியா கூட்டணிக்கும் அதுதான் முன்னுரிமை. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் (மேலும்) மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம். இந்தியாவில், சுதந்திரத்திற்குப் பிறகு, பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக ஆக்கப்பட்டன. ஆனால், ஒரு மாநிலம் தரம் தாழ்த்தப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். இதுவே முதல் முறை. இதற்கு முன் நடந்ததில்லை.

எங்களுக்கு (காங்கிரஸ்) ஜம்மு காஷ்மீர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது முக்கியம். நான் ஏன் சொல்கிறேன் என்றால், நாடு முழுவதும் ஜனநாயகத்தை நான் பாதுகாக்கிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் மக்களின் மனதில் உள்ள வலியை அகற்றுவதே நோக்கம்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை  தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்புVCK ADMK Alliance : அதிமுகவை அழைத்த திருமா!உதயநிதி பதிலடி!நீடிக்குமா கூட்டணி?Rahul Gandhi Speech in USA : மோடி, RSS -ஐ ரவுண்டு கட்டிய ராகுல் காந்தி!ஆர்ப்பரித்த அமெரிக்கர்கள்Karur Bakery Fight : கரூரில் கந்தலான பேக்கரி..போதையில் வெறிச்செயல்..இளைஞர்கள் அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை  தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு - கட்டி தந்தது யார் தெரியுமா..?
ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு - கட்டி தந்தது யார் தெரியுமா..?
Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு
Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு
Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ
Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ
75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
“தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
Embed widget