மேலும் அறிய

RahulGandhi Reaction: நாட்டுக்காக போராடுகிறேன்... என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் - ராகுல்காந்தி திட்டவட்டம்

"இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். அதற்காக, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ள நிலையில், ராகுல்காந்தி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். அதற்காக, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா?

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஒன்று, இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட உடன், அவரை யாரும் தகுதி நீக்கம் செய்ய வேண்டாம். அவரின் எம்.பி. பதவி தானாக தகுதி நீக்கம் ஆகிவிடும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

ஆனால், சில சட்ட வல்லுநர்கள், வேறு விதமான கருத்துகளை முன்வைக்கினர். தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து தகுதி நீக்க நடவடிக்கையை தள்ளி போடலாம் என கூறுகின்றனர்.

காலியானதாக அறிவிக்கப்படும் வயநாடு தொகுதி:

இனி, அவரின் வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். இதையடுத்து, அங்கு தேர்தல் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக, மத்திய டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்தி கேட்டு கொள்ளப்படுவார்.

1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அதே தருணத்திலேயே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என கூறுகிறது. 

அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக ராகுல்காந்திக்கு பிணை வழங்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரை தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு காரணமாக மாறியுள்ளது.

ராகுல் காந்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை:

இனி, தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து ராகுல்காந்தி நீதிமன்றத்திற்கு செல்லலாம். இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், "தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு குடியரசு தலைவரால் மட்டுமே எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யலாம்" என கூறியுள்ளனர்.

வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்பி மகேஷ் ஜெத்மலானி, "சட்டத்தின்படி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த முடிவு பற்றி சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலைமையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பியே" என்றார்.

மக்களவை பதவியிலிருந்த் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், “ராகுல் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் அச்சமின்றி சரியான தனது கருத்துக்களைத் தெரிவித்து வருவது நாம் அறிந்ததே! அது ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget