மேலும் அறிய

Rahul Questions Jaishankar: “இது ஒரு தவறு இல்லை, அது ஒரு குற்றம்“ ஜெய்சங்கரை தெறிக்கவிடும் ராகுல் காந்தி - சரமாரி கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த ராகுல் காந்தி, மீண்டும் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அது என்ன கேள்விகள்.? பார்க்கலாம்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த ராகுல் காந்தி, ஜெய்சங்கர் மௌனம் காத்த நிலையில், தற்போது மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேட்டியளித்த ஜெய்சங்கர்

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த தீவிரவாத நிலை களை ஒதே இரவில் துல்லியமாக தாக்கி அழித்தது இந்தியா. இதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்ததால், தொடர்ந்து சண்டை நீண்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளது. அதே போல் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தியுள்ளது. இனி எந்த ஒரு தீவிரவாத தாக்குதலும் போராகவே எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இந்தியா உடனடியாக தாக்குதலை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பேட்டி ஒன்றில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்தியா தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும், ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாது என்பதால், பாகிஸ்தான் ராணுவம் இதிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றும் யோசனை வழங்கப்பட்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் அந்த நல்ல யோசனையை ஏற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஜெய்சங்கருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

இந்த பேட்டியை மேற்கோள் காட்டி, தனது சமூக வலைதளத்தில் கடந்த 17-ம் தேதி பதிவிட்ட ராகுதல் காந்தி, தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது ஒரு குற்றம் என கூறியிருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய அரசு அதை செய்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், அதற்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதன் விளைவாக, நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

மௌனம் காத்த ஜெய்சங்கர்.. மீண்டும் கேள்வி எழுப்பிய ராகுல்

ராகுலின் அந்த பதிவிற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படாததால், மீண்டும் தனது சமூக வலைதளத்தில் இன்று பதிவிட்டள்ள ராகுல் காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சரின் மௌனமே சொல்லவில்லையா, இது கேவலமானது என்று கூறியுள்ளார்.

அதனால், நான் மீண்டும் கேட்கிறேன், பாகிஸ்தானுக்கு தகவல் தெரிந்ததால், எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம் என கேட்டுள்ளார்.

மேலும், இது ஒரு தவறு இல்லை, அது ஒரு குற்றம் என கூறியுள்ள ராகுல் காந்தி, உண்மையை தெரிந்துகொள்ள இந்த தேசத்திற்கு தகுதி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget