மேலும் அறிய

ராகுல் காந்தி தகுதி நீக்கம்...தண்டனைக்கு தடை விதிக்கப்படுமா? தீர்ப்பு எப்போது...சூரத் நீதிமன்றம் அறிவிப்பு..!

இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ராபின் மொகேரா, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அவதூறு வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம் தீரப்பை ஒத்திவைத்துள்ளது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ராபின் மொகேரா, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி, இந்த வழக்கில் உத்தரவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவதூறு வழக்கு:

கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கூறியிருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ராகுல் காந்தியின் சார்பாக, நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா மற்றும் வழக்கறிஞர்கள் கிரிட் பன்வாலா, தரன்னும் சீமா ஆகியோர் ஆஜராகினர்.

இன்றைய விசாரணையின்போது வாதிட்ட வழக்கறிஞர் சீமா, "அவதூறு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே புகார் அளிக்க முடியும். எனவே, பூர்ணேஷ் மோடி புகார் அளிக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.

மோடி என்ற குடும்பப் பெயரை அவதூறு செய்யும் நோக்கம் பேச்சாளரிடம் இருந்ததா என்பதைக் கண்டறிய ராகுல் காந்தியின் உரையை சூழலுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சன ரீதியாக பேசியதன் விளைவு அன்றி வேறில்லை" என்றார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ராகுல் காந்தி:

பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்கினர். இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடிக்க கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget