மேலும் அறிய

Punjab Police Encounter : பஞ்சாபில் தொடரும் என்கவுண்டர்.. அதிரடி காட்டும் முதலமைச்சர்.. பரபர பின்னணி

கடந்த 11 நாள்களாக அதிரடி என்கவுண்டர் சம்பவங்களில் பஞ்சாப் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக கடத்தப்படும் போதை பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது, தொடர்ந்து அதிகரிக்கும் குற்றச் செயல்கள் ஆகியவை பஞ்சாப் மாநிலத்தின் முக்கியமான பிரச்னைகளாக கருதப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணாததால்தான், பஞ்சாப் மாநிலத்தின் பிரதான கட்சிகளாக இருந்த காங்கிரஸ், அகாலி தளம் கடந்த தேர்தலில் தோற்றது. 

பஞ்சாப் மாநிலத்தின் தலையாய பிரச்னைகள்:

பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். ஆட்சி பொறுப்பானது, இவரின் வசம் வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்னைகதளில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த 11 நாள்களாக அதிரடி என்கவுண்டர் சம்பவங்களில் பஞ்சாப் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மோகா மாவட்டத்தில் இன்று காலை காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மூன்று ரவுடிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து மோகா மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹரிந்தர் சிங் கூறுகையில், "சம்பவ இடத்துக்கு வந்த குண்டர்கள் தங்கள் பைக்கை நிறுத்தச் சொன்னபோது தப்பிக்க முயன்றனர். ஆனால்,போலீசார் அவர்களைப் பின்தொடர்ந்தனர். பின்னர், அவர்கள் தங்கள் பைக்கை விட்டுவிட்டு பண்ணைக்குள் சென்று போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

தொடரும் என்கவுண்டர் சம்பவங்கள்:

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து குண்டர்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் தப்பிக்க முயன்றபோது காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டில் எந்த காயமும் ஏற்படவில்லை" என்றார். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்களை காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதுபோன்று பஞ்சாபில் கடந்த 11 நாள்களில் 8 சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால், அவர்கள் தக்க பதிலடி தருவார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மொஹாலி மற்றும் பாட்டியாலாவில் நேற்று இரண்டு என்கவுண்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் இரண்டு கார் திருடர்கள் மற்றும் கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இரு சம்பவங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.                                                                       

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget