மேலும் அறிய

Pune Inspector Suicide: பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை.. பணிச்சுமை காரணமா? அலசும் போலீஸ்

புனேவில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரான ஷில்பா சவான் (48) விஷ்ராந்த் வாடியின் சாந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பிறிவு பெண் இன்ஸ்பெக்டர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை அன்று பணிக்கு செல்லாததால், அவருடன் பணியில் ஈடுபடும் சக காவலர்கள் ஷில்பாவை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் ஷில்பா தொலைபேசியை எடுக்காததால், சக காவர்கள் விஷ்ராந்தவாடியின் சாந்திநகர் பகுதியில் உள்ள பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கியபடி ஒரு உடல் இருப்பதை கண்டு அது இன்ஸ்பெக்டர் ஷில்பா சவான் என உறுதி செய்தனர்.

“இன்ஸ்பெக்டர் ஷில்பா அவரது வீட்டு ஃபேனில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்ததால் அதை தற்கொலை என எடுத்துக்கொள்ள முடியாது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரமும் இல்லை. வீட்டில் அவரது மகன் உடன் வசித்து வந்தார். தற்போது காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஷில்பா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது”என விஷ்ராந்த வாடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Pune Inspector Suicide: பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை.. பணிச்சுமை காரணமா? அலசும் போலீஸ்

சில வருடங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் ஷில்பா புனேவுக்கு மாற்றப்பட்டார். தற்போது புனே போலீஸ் கமிஷனராக இருக்கும் அமிதாப் குப்தா, “இன்ஸ்பெக்டர் மரணம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்”.

“காவல்துறையில் பணிச்சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. காவல்துறையில் நல்ல பெயரை பெற்றவர்கள் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருப்பதால் அவசர முடிவவை எடுத்துக் கொள்கின்றனர். காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை விடுப்பு என்பது எப்போதுமே உள்ளது. ஆனால் அதனை சரிவர பெற முடியாததால் சிக்கல்கள் உள்ளன. காவல்துறையினர் 24 மணி நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தால், அடுத்த நாள் ஓய்வு எடுக்கச் செல்லலாம். காவலர்களுக்கு அவ்வப்போது அதிகாரிகளும் ஓய்வு அளிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.

அண்மைக்காலமாக, தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. இதற்குக் காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஈடுசெய்யக் கூடிய அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது, விலைவாசி உயர்வுக்கு ஏற்றது போல வாழ்க்கை நடத்த முடியாமல் இருப்பதாகும். நீண்டகாலமாக நீடித்திருக்கும் பிரச்னைக்குத் தற்காலிக தீர்வாக தற்கொலை செய்து கொள்கின்றனர். உளவியல்ரீதியாக தற்கொலை செய்பவர்களும் உள்ளனர். அனைத்து தற்கொலைகளும் திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நொடிகளில் திடீரென முடிவு எடுத்து விடுவார்கள். அவ்வாறு முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஒரு குறுஞ்செய்தி அனுப்பி முன்கூட்டியே உணர்த்தி தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்று பல காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் தற்கொலை குறித்து தெளிவாக தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
Embed widget