மேலும் அறிய

BrahMos Missile: 'சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணை.. 75 சதவீதம் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது' - பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தலைவர்

பிரமோஸ் ஏவுகணைத் திட்டம் 75 சதவீத உள்நாட்டுத் திறனை எட்டியுள்ளதாக பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறியுள்ளார்.

பிரமோஸ் ஏவுகணைத் திட்டம் 75 சதவீத உள்நாட்டுத் திறனை எட்டியுள்ளதாக பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறியுள்ளார்.

பிரமோஸ் ஏவுகணை:

சென்னையைச் சேர்ந்த தனியார்  நிறுவனம் தரப்பில் சிறுசேரியில் உள்ள ஆலையில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸுக்கு ‘பிரம்மோஸ் ஏவுகணை சோதனைக் கருவி’ 27வது முறையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதுல் தினகர் ரானே சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். பிரம்மோஸ் ஏவுகணை 2004ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த போது 13 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உதிரி பாகங்கள் இருந்தன. ஆனால் கடந்த 19 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரித்துள்ளது என பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறியுள்ளார்.

100 சதவீதம் முடியாது:

ஆனால் 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இந்த ஏவுகணையை தயாரிக்க முடியாது. ஏனெனில் பிரம்மோஸ் ஏவுகணை என்பது ரஷ்யா மற்றும் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் கூட்டு திட்டமாகும். மேலும் ரஷ்யாவின் ஒரு சில தொழில்நுட்பங்களை நாம் சார்ந்துள்ளதால் 100 சதவீதம் எட்ட முடியாது என தெரிவித்தார். பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் ‘மிலிட்டரி இன்டஸ்ட்ரியல் கன்சார்டியம்’ என்பிஓ மஹினோஸ்ட்ரோயெனியா (‘Military Industrial Consortium’ NPO Mahinostroyenia)ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம்செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சில தொழில்நுட்பங்கள் இன்னும் ரஷ்யாவால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டம் தற்போது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.  75 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பங்களால், பிரம்மோஸ் ஏவுகணையின் ஒட்டுமொத்த விலை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் ரானே கூறினார்.  

டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) லிமிடெடின் அதிகாரி ஸ்ரீனிவாசகோபாலன் ரங்கராஜன் கூறுகையில், இந்த நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாகவும் தற்போது பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை தேவைகளுக்கான ரேடார்களை வடிவமைத்து உற்பத்தி செய்து வருவதாகவும்” கூறினார். மேலும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட நிறுவனத்திற்கும் பிரம்மோஸ் ஏவுகனைக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  “ஆனால் இவை உண்மையான ஏற்றுமதிகள் அல்ல. முழு உபகரணங்களையும் இந்தியாவில் உருவாக்கி, பாதுகாப்பு அமைச்சகத்திடம் கொடுத்து, அரசாங்கத்தின் அனுமதியுடன் உலகின் பிற பகுதிகளுக்கு வழங்குவதே உண்மையான ஏற்றுமதியாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.  

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget