மேலும் அறிய

PM Modi Speech: கோவா வரலாற்றைத் திரித்து கூறுவதா? பிரதமர் மோடிக்கு கேள்விகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் கீழ் இருந்த காலத்தில் கோவா போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் வந்தது - பிரதமர் மோடி கருத்து

கோவா விடுதலை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சர்ச்சைக்குரிய வகையில் வரலாற்றைத் திரித்து கருத்துக் கூறியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

முன்னதாக, நேற்று கோவாவில் கோவா விடுதலை தின கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் கீழ் இருந்த காலத்தில் கோவா போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் வந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். அதன் பிறகு இந்தியா பல கிளர்ச்சிகளை சந்தித்தது. பல நூற்றாண்டுகள் மற்றும் ஆட்சி மாற்றங்களுக்கு பிறகும், கோவா அதன் இந்தியத்தன்மையை மறக்கவில்லை, இந்தியாவின் மற்ற பகுதிகளும் கோவாவை மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.  

1510 இல் போர்த்துகேயர்கள் கோவைவை கைப்பற்றியதாகவும்,1526ல் நடைபெற்ற முதலாவது பானிபட் போரின் தொடர்ச்சியாகத் தான் முகாலாய பேரரசு இந்தியாவில் நிறுவப்பட்டதாகவும் வரலாற்றிசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 1526ல்  நடைபெற்ற போரில், பாபர், கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார் என்பது வராலற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. போர்த்துகேயர்கள் வருகைக்கும், முகலாயர்கள் வருகைக்கும் இடையே 16 ஆண்டு கால இடைவெளி இருக்கும் நிலையில்,  கோவா போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் வரும் போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் கீழ் இருந்ததது என்ற பிரதமரின் கருத்து தவறானது என்றும் தெரிவிக்கின்றனர்.   'History of Portuguese Navigation in India', 'Goa-Kanara Portuguese Relations, 1498-1763', NCERT புத்தகங்கள் உள்ளிட்ட புதத்தகங்களும் இதனையே தெளிவுபடுத்துகின்றன.      

PM Modi Speech: கோவா வரலாற்றைத் திரித்து கூறுவதா? பிரதமர் மோடிக்கு கேள்விகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்!

முன்னதாக, கடந்த 13ம் தேதி வாரணாசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, " ஔரங்கசீப்பின் அராஜகங்களையும், பயங்கரவாதத்தையும் இந்த நகரின் வரலாறு கண்டது. வாள்முனையில் நாகரீகத்தை மாற்ற முயன்றவர்கள், மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது. ஆனால் இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது. ஒரு ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார் என்று கூறிய பிரதமர், சலார் மசூத் வந்தால், மன்னர் சுகல்தேவை போன்ற துணிச்சல்மிக்க வீரர்கள் இந்தியாவின் ஒற்றுமையின் சுவையைக் காட்டுவார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் காசி மக்கள் ஹேஸ்டிங்ஸ்-க்கு என்ன நடந்தது என்பதை அறிந்திருந்தனர் என்றார். 

இதற்கிடையே,, உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் ராகுல் தலைவர், " பெட்ரோல் விலை உயர்வு, பண வீக்கம், வேலை வாய்ப்பின்மை  குறித்து மட்டும் ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது. மக்களின் இன்னல்களுக்கு முக்கிய காரணமாக ஆர்எஸ்எஸ்-ன்    இந்துத்துவா உள்ளது" என்று தெரிவித்தார்.    

அடுத்தாண்டில் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் குற்றமற்ற வரலாற்றை, குறுகிய நோக்கில் மறுவாசிபுக்கு உட்படுத்தப்படுவது வேதனையளிக்கும் செயல் என பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.         

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
Embed widget