மேலும் அறிய

பாகிஸ்தான் மீது தாக்குதல்.. வீடியோ எடுத்தது ஏன்? காரணம் சொல்லும் பிரதமர் மோடி

இந்தியா மேற்கொண்ட விமானப்படை தாக்குதலை வீடியோ எடுத்ததற்கு காரணம் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டால் கொடுப்பதற்காக வீடியோ எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட விமானப்படை தாக்குதலை வீடியோ எடுத்ததற்கு காரணம் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டால் கொடுப்பதற்காக வீடியோ எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மனம் திறந்த பிரதமர் மோடி:

குஜராத் மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சியைக் குறிக்கும் 20வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "நாங்கள் 22 நிமிடங்களில் ஒன்பது பயங்கரவாத தளங்களை இடித்துத் தரைமட்டமாக்கினோம். இந்த முறை நாங்கள் அதை கேமராவில் பதிவு செய்தோம். அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்தோம். நாட்டில் யாரும் ஆதாரம் கேட்கக்கூடாது என்பதற்காக இப்படி செய்தோம்" என்றார்.

காங்கிரஸ் மற்றும் நாட்டின் முதல் பிரதமர் நேருவை விமர்சித்த மோடி, "அடிமை சங்கிலிகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும். நாடு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அன்றிரவு, காஷ்மீர் மண்ணில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் இந்தியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது. அன்று, இந்த முஜாஹிதீன்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை இந்திய ராணுவம் நிறுத்தப்படுவதை சர்தார் (வல்லபாய்) படேல் விரும்பவில்லை. ஆனால் அவரது வார்த்தைகள் கவனிக்கப்படவில்லை.

"நிராயுதபாணியான அப்பாவிகள்"

பயங்கரவாதிகள் அன்றிரவு இரத்தத்தை ருசித்தனர். அவர்களின் தொடர் தாக்குதல்கள் 75 ஆண்டுகளாகத் தொடர்கின்றன. பஹல்காமிலும், இதன் ஒரு வக்கிரமான வடிவம் காணப்பட்டது. 75 ஆண்டுகளாக நாங்கள் பொறுத்துக் கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு முறை போர் வெடித்தபோதும், மூன்று முறையும், இந்தியாவின் ராணுவ வலிமை பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியாவுடன் போரில் வெற்றி பெற முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொண்டது. எனவே, அது ஒரு மறைமுகப் போரைத் தொடங்கியது.

ராணுவப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார்கள். நிராயுதபாணியான அப்பாவிகள், எதோ ஒரு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். எதோ ஒரு ஹோட்டலில் இருக்கிறார்கள். எதோ ஒரு சுற்றுலாப் பயணியாக இருக்கிறார்கள்.

பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பு கிடைத்த இடங்களில், அவர்கள் கொலை செய்து கொண்டே இருந்தார்கள். நாங்கள் பொறுத்துக் கொண்டே இருந்தோம். இனியும் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? நமது அண்டை வீட்டாரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவர்கள் நம்மை நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நாம் மீண்டும் மீண்டும் நமக்கு சவால் விடுக்கும்போது, ​​இதுவும் துணிச்சலானவர்களின் நாடு என்பதை காட்ட வேண்டும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget