மேலும் அறிய

PM Modi: தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.. முழுமையாக வேரறுக்கப்படும் - பிரதமர் மோடி பேச்சு

தீவிரவாத தாக்குதல்களுக்கான எதிர்வினையின் தீவிரம் அது எங்கு நடக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடாது என, பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சர்வதேச அளவில் ‘பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது’ என்ற கருப்பொருளில் கடந்த 2018ம் ஆண்டு முதல், அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது.  2018-ம் ஆண்டு பாரீசிலும், 2019-ம் ஆண்டு மெல்போர்னிலும் நடைபெற்ற இரண்டு மாநாடுகளில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், "பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது" என்ற கருப்பொருளில், 3வது அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 75 நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டின்  முதல் நாளில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி,  பயங்கரவாதத்திற்கு எதிரான பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது, பயங்கரவாத தாக்குதல்களுக்கான எதிர்வினையின் தீவிரம் அது எங்கு நடக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடாது எனவும், அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும் சமமான எதிர்வினைக்கு தகுதியானவை என்றும் கூறினார். மனிதகுலம், சுதந்திரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல்  தான் பயங்கரவாதம் எனவும், உலகளாவிய அச்சுறுத்தலைக் கையாள்வதில் தெளிவற்ற அணுகுமுறைக்கு இடமில்லை என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தின் மோசமான முகத்தை உலகம் தீவிரமாகக் கவனிக்கும் முன்பே இந்தியா கண்டுள்ளது என்றார். பல தசாப்தங்களாக பயங்கரவாதம் பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் இந்தியாவை காயப்படுத்த முயன்றுள்ளது.  ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களை இந்தியா இழந்தாலும், பயங்கரவாதத்தை தைரியமாக எதிர்த்துப் போராடி வருகிறது என கூறினார். பயங்கரவாதத்தால் ஒரு உயிரை இழந்தாலும் அது எங்களுக்கு இழப்புதான் எனவும், பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கும் வரை ஓய மாட்டோம் என்றும் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கான தங்களின் ஆதரவை வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளதாக, மாநாட்டில் பங்கேற்காத பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை மறைமுகமாக சாடினார். அவ்வாறு  அரசியல், கருத்தியல் மற்றும் நிதி ஆதரவை பயங்கரவாதிகளுக்கு வழங்கும் நாடுகள் மீது, அதற்கான விலையை சுமத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் மீதான பயங்கரவாதத்தின் தாக்கம் நீண்டகாலமாக கடுமையாக உள்ளது என்றார். தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பகுதியை யாரும் விரும்புவதில்லை எனவும்,  இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்றும் கவலை தெரிவித்தார். மேலும்,  பயங்கரவாத நிதியுதவியின் வேரை நாம் தாக்கி அழிப்பது, வளர்ச்சிக்கு மிக முக்கியமானது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தொடர்ந்து, இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக  தொழில்நுட்பம்‌, சட்டம், ஒழுங்குமுறை மற்றும் அனைத்து ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கபட உள்ளன.

அமைதியை விரும்பும் நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்கொள்வதில் உறுதியான ஒத்துழைப்புக்கான பாலத்தை உருவாக்கவும், இந்தியா அக்டோபரில் இரண்டு உலகளாவிய நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  அதன்படி, டெல்லியில் சர்வதேச காவல்துறையின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தை, இந்தியா தலைமையேற்று நடத்தியது நினைவுகூரத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Mahindra BE6: சும்மா.. 135 நொடிகளில் விற்றுத் தீர்ந்த 999 யூனிட்கள் - யானை விலை, போட்டி போட்டு வாங்க காரணம் என்ன?
Mahindra BE6: சும்மா.. 135 நொடிகளில் விற்றுத் தீர்ந்த 999 யூனிட்கள் - யானை விலை, போட்டி போட்டு வாங்க காரணம் என்ன?
Tamilnadu Roundup 24.08.2025: 29ம் தேதி வரை மழை.. காலை உணவுத்திட்டத்தால் முதல்வர் பெருமிதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup 24.08.2025: 29ம் தேதி வரை மழை.. காலை உணவுத்திட்டத்தால் முதல்வர் பெருமிதம் - 10 மணி சம்பவங்கள்
ரூ.6 லட்சம்தான்.. கிராண்ட் i10 Nios VS டாடா Tiago.. இரண்டில் எந்த காரு பெஸ்ட்? எது வாங்கலாம்?
ரூ.6 லட்சம்தான்.. கிராண்ட் i10 Nios VS டாடா Tiago.. இரண்டில் எந்த காரு பெஸ்ட்? எது வாங்கலாம்?
Vijay Jana Nayagan: திரை தீப்பிடிக்கும்.. மொத்த பாய்ஸையும் இறக்கும் விஜய்.. ஜனநாயகனில் இத்தனை கேமியோக்களா?
Vijay Jana Nayagan: திரை தீப்பிடிக்கும்.. மொத்த பாய்ஸையும் இறக்கும் விஜய்.. ஜனநாயகனில் இத்தனை கேமியோக்களா?
Embed widget