மேலும் அறிய

"தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை.. கண்களை மூடி கொள்ளும் காங்கிரஸ்" பிரதமர் மோடி நேரடி அட்டாக்

தலித்துகள் மீதான வன்கொடுமை என்றால் காங்கிரஸ் கண்களை மூடிக் கொள்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக குறிவைக்கும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.

சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பெரிய பிரச்னையாக கருதப்பட்ட உட்கட்சி பூசலுக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது.

ராஜஸ்தானில் வெற்றி பெறப்போவது யார்?

அதுமட்டும் இன்றி, அசோக் கெலாட் அறிவித்த பல சமூக நல திட்டங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சித்து வருகிறது. அதேபோல, பிரதமர் மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகிறார். பாலி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், "ராஜஸ்தான் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு தேவை. காங்கிரசுக்கு ஊழல் மற்றும் குடும்ப அரசியலை விட முக்கியமானது எதுவுமில்லை. 

"ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரஸின் உண்மையான முகம் இதுதான்"

சமரச அரசியலை தவிர வேறு எதையும் காங்கிரஸ் நினைப்பதில்லை. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் ‘நாரிசக்தி வந்தான் சட்டம்’ இயற்றப்பட்டதில் இருந்தே, பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமிர்பிடித்த கூட்டணியின் தலைவர்கள் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் குறித்து மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.

பெண்கள் குறித்து INDIA கூட்டணியின் மூத்த தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி, "பிகார் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

ஆனால், இது குறித்து எந்த காங்கிரஸ் தலைவர்களும் எதுவும் கூறவில்லை. ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரஸின் உண்மையான முகம் இதுதான். தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களைக் கண்டு காங்கிரஸ் கண்ணை மூடிக் கொள்கிறது. இன்று, நாட்டின் வளர்ச்சிக்காகவும் குறிக்கோளுக்காகவும் இரவு பகலாக உழைத்து வருகிறோம். மேலும் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா அடையும் உயரத்தில் ராஜஸ்தான் பெரும் பங்கு வகிக்கும்" என்றார்.                                                                   

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget