மேலும் அறிய

"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!

டிஜிட்டல் புரட்சி, சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை காரணமாக தகவல் சமத்துவம் என்பது சாத்தியமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கர்மயோகி இயக்கத்தின் மூலம், நமது நாட்டின் வளர்ச்சியின் உந்து சக்திக்கு ஏற்ற மனித வளத்தை உருவாக்குவதே நமது குறிக்கோள் என்று கூறினார்.

இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இந்த ஆர்வத்துடன் நாம் தொடர்ந்து பணியாற்றினால், நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். தேசிய கற்றல் வாரத்தின் போது புதிய கற்றல்களும் அனுபவங்களும் வலிமையை அளித்து, பணி முறைகளை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி பேசியது என்ன?

இது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நமது இலக்கை அடைய உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில்  மாற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.

அதன் நல்ல தாக்கத்தை இன்று மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்று அவர் கூறினார். அரசில் பணியாற்றுபவர்களின் நல்ல முயற்சிகள், கர்மயோகி இயக்கம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக இது நடைபெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவை உலகம் ஒரு வாய்ப்பாக பார்க்கும் அதே வேளையில், இந்தியாவுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நல்ல மாற்றத்துக்கான இந்தியாவை உருவாக்க, செயற்கை நுண்ணறிவை நாம் வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

"மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை"

டிஜிட்டல் புரட்சி, சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை காரணமாக தகவல் சமத்துவம் என்பது சாத்தியமாகிவிட்டது என்றும் பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவுடன், தகவல் செயலாக்கமும் சமமாக எளிதாகி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு தகவல் தெரிவிப்பதுடன் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் கண்காணிக்க முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார். எனவே, உயர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப அரசு ஊழியர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதற்குக் கர்மயோகி இயக்கம் உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதுமையான சிந்தனை, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். புதிய சிந்தனைகளைப் பெறுவதற்கு புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி முகமைகள், இளைஞர்களின் உதவி ஆகியவற்றை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Embed widget