மேலும் அறிய

Modi Asean: உலக வளர்ச்சியில் ஆசியான் அமைப்புக்கு முக்கிய பங்கு: இந்தோனேசியாவில் பிரதமர் மோடி

வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை இந்தியாவையும் ஆசியான் அமைப்பையும் இணைக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம், 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்த 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இச்சூழலில், ஆசியான் மற்றும் 18 ஆவது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்பதற்காக கூடியிருந்த  இந்தோனேசியா வாழ் இந்தியர்களை சந்தித்த மோடி, அவர்களுக்கு கைகொடுத்து மகிழ்ந்தார். 

"கிழக்காசிய நாடுகளுக்காக இந்தியா வகுத்த கொள்கையின் மைய தூண் ஆசியான்"

பின்னர், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இன்று நடைபெற்ற 20ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளுக்காக வகுக்கப்பட்ட கொள்கையில் ஆசியான் அமைப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்கி பேசினார்.

"கிழக்காசிய நாடுகளுக்காக இந்தியா வகுத்த கொள்கையின் மைய தூணாக ஆசியான் அமைப்பு உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா-ஆசியான் அமைப்புக்கு இடையேயான கூட்டணி அதன் நான்காவது தசாப்தத்தை எட்டியுள்ளது. 

மேலும், உச்சி மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

"இந்தியா - ஆசியான் இணைப்பு"

எங்கள் வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை இந்தியாவையும் ஆசியான் அமைப்பையும் இணைக்கின்றன. அதனுடன், நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு மற்றும் பல துருவ உலகம் ஆகியவற்றில் நமது பகிரப்பட்ட நம்பிக்கை நம்மை ஒன்றிணைக்கிறது. 

ஆசியான் அமைப்பு, இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையத் தூண். ஆசியான் - இந்தியா, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய உறவில் ஆசியான் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. 'வளர்ச்சியின் மையம்: ஆசியான் அமைப்பு' என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள். 

ஆசியான் அமைப்பு முக்கியமானது. ஏனெனில், இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஏனெனில், உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் G20 அமைப்பின் கருப்பொருளாக 'வசுதேவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் உள்ளது.

உலகளாவிய தெற்கின் குரலைப் பெருக்க அழைப்பு விடுக்கிறேன். 2022 ஆம் ஆண்டில் இந்தியா-ஆசியான் நட்பு தினம் கொண்டாடப்பட்டு, விரிவான வியூக ரீதியான கூட்டாண்மையாக உறவு உயர்த்தப்பட்டது" என்றார்.

இதையும் படிக்க: G20 summit attendees: ஜி20 உச்சி மாநாடு.. பங்கேற்கப்போகும் உலக தலைவர்கள்..! யார் உள்ளே? யார் வெளியே?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget