மேலும் அறிய

உச்ச நீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: ஆகஸ்ட் 2 முதல் தினசரி விசாரணை

ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பொருந்தும் வகையில், 1954 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து, இந்திய அரசு ஜனாதிபதி ஆணை வெளியிட்டது.

இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2 முதல் தினசரி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நிலவும் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றம், கல் வீச்சு சம்பவங்களைக் குறைத்தல் மற்றும் பயங்கரவாத வலைப்பின்னல்களை அகற்றுதல் உள்ளிட்டவற்றை பிரமாணப் பத்திரம் எடுத்துக்காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. அதைத் தடுக்க, சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதுதான் ஒரே வழி என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு வட இந்தியாவில் சர்ச்சைக்குரிய பகுதியான ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இது ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு, மாநிலக் கொடி மற்றும் உள் நிர்வாக சுயாட்சி ஆகியவற்றை வழங்கியது. இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கு வெற்றிகரமான தேர்தல் நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: ஆகஸ்ட் 2 முதல் தினசரி விசாரணை

இயல்புநிலை மீட்கப்பட்டது

"இன்று, பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தேவையான நிறுவனங்களும் அங்கு சாதாரணமாக இயங்குகின்றன. தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, அச்சத்தில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்," என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், காஷ்மீரி, டோக்ரி, உருது, ஹிந்தி போன்ற உள்ளூர் மொழிகள் அலுவல் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்.. இரட்டை சதத்தில் இஞ்சி, பட்டாணி, சின்ன வெங்காயம்.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..

நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370

ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பொருந்தும் வகையில், 1954 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து, இந்திய அரசு ஜனாதிபதி ஆணை வெளியிட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 6 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிரிவு 1 ஐத் தவிர, பிரிவு 370 இன் அனைத்து பிரிவுகளையும் நீக்கியது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நிலுவையில் உள்ள 20க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: ஆகஸ்ட் 2 முதல் தினசரி விசாரணை

எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்

சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடைசியாக மார்ச் 2020 இல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த விஷயத்தை பெரிய அமர்வுக்கு மாற்ற மறுத்துவிட்டது. அந்த விசாரணையின் போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளின் செல்லுபடியை எதிர்த்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மற்றொரு தொகுதி மனுக்கள் நிலுவையில் உள்ளதாக பெஞ்ச் குறிப்பிட்டது. சட்டப்பிரிவு 370 தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஒன்றாக விசாரிக்க பெஞ்ச் முடிவு செய்தது.

இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2 முதல் தினசரி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
Embed widget