மேலும் அறிய

இந்துக்களுக்கே பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லை: நாடாளுமன்றத்தில் திருமா சொன்ன காரணம்!

நாடாளுமன்றத்தில் வெடித்த நம்பிக்கையில்லா தீர்மானம் - பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்திய திருமாவளவன்


பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கையை இழந்ததால், அவரை பதவி விலகுமாறு மக்களவையில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இன்றைய கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன் வைத்தன. 12 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும் காங்கிரஸ் சார்பில் அசாம் மாநில எம்பி தருண் கோகோய், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். பின்னர் தனது உரையை தொடர்ந்த அவர், மணிப்பூர் விவகாரத்தில் நீதி வேண்டும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாகவும், பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

பிரதமர் தனது தோல்வியை ஒப்பு கொள்ள வேண்டும் என்றும், மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைகள், உயிரிழப்புகள், பற்றி எரிந்த வீடுகள், மக்களின் அழுகுரல் என அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்கட்சிகள் முன் வைத்தன. மேலும், மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்ததால், மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குரலெழுப்பினர். 

விவாத்தின் இடையே, பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”இந்து பெரும்பான்மை மக்களுக்கு பாஜக அரசு எதிராக இருப்பதால், கர்நாடகாவில் இந்து சமூகத்தை சேர்ந்த மக்களே பாஜகவை வீழ்த்தி விட்டு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை இழந்து இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

எஸ்.இ., எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்பட வில்லை என்றும், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும், திட்டமிட்டு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை என்றும் பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த திருமாவளவன், பாஜக அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசின் மீதான நம்பிக்கையின்மைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.  

தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசிய டி.ஆர். பாலு, ”மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுரையில் எயிம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என அடிக்கல் நாட்டிய மத்திய அரசு, இதுவரை மருத்துவமனை கட்ட ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை” என விமர்சித்தார். 

முன்னதாக பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை ராகுல்காந்தி தொடங்கி வைப்பதாக இருந்தது. அவர் விவாதத்தை ஏன் தொடங்கவில்லை என பாஜக எம்பிகள் முழக்கமிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பிக்கள், அவையில் பிரதமர் ஏன் இல்லை என கேள்வி எழுப்பினர். 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget