மேலும் அறிய

India captures Pakistani pilots : அத்துமீறிய பாகிஸ்தான்.. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்.. சிக்கிய பாகிஸ்தான் விமானி...

pakistani pilot captured: "பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளார்" 

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தீவிரவாத நிலைகள் மீது இந்திய நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஜம்முவை குறிவைத்து மீண்டும் தாக்க தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஆனால், வானில் பறந்து வந்த ட்ரோன்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளது.

அராஜகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் 

இந்தியா மீது குறி வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை பாகிஸ்தான் அனுப்பிய நிலையில், அனைத்து ட்ரோன்களும் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக இருக்கும் இடங்களை குறிவைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தபோதும் அவற்றை இந்திய பாதுகாப்பு அம்சங்கள் தகர்த்து எறிந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் இருக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகி வருகின்றன. 

பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தியது இந்தியா 

இந்நிலையில், இந்தியாவை நோக்கி தாங்கள் அனுப்பிய ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் தடுத்த நிலையில், தங்களது இரண்டு போர் விமானங்களை ஆயுதங்களுடன் இந்தியாவின் ராணுவ படைதளம் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். 

ஆனால், பாகிஸ்தானின் JF-17 என்ற இரண்டு போர் விமானங்களையும் இந்திய விமானப்படையும், ராணுவமும் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனை பாகிஸ்தானின் ராணுவ படை தளபதிகளில் ஒருவரான அகமது ஷரிப் சவுத்திரி உறுதிப்படுத்தியிருக்கிறார். தங்களது இரண்டு போர் விமானங்களும் பணிகளுக்கு இடையே இழந்துவிட்டோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிடிபட்ட பாகிஸ்தான் விமான படைவீரர்

பாகிஸ்தான் இந்தியா மீது நடத்தும் அனைத்து தாக்குதலையும், இந்தியா வெற்றிகரமாக தடுத்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த விமானி ஒருவரை இந்திய ராணுவம் கையும் களவுமாக பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் வெளியேறிய விமானி பிடிபட்டார்.

ராஜஸ்தான் ஜெய்சால்மர் எல்லை அருகே பாகிஸ்தான் விமானி உயிருடன் பிடிபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்திய ராணுவம் இரண்டு விமானங்களை, சுட்டு வீழ்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று ஏராளமான ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget