மேலும் அறிய

பஹாவல்பூரை ஏன் இந்தியா குறி வைத்தது ? தீவிரவாதிகளின் சொர்க்கபூமி.. பின்னணியில் அதிர்ச்சி தகவல்

Operation Sindoor Bahawalpur Attack: பஹாவல்பூரை ஏன் இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியது, அதிர வைக்கும் பின்னணி காரணங்கள் என்னென்ன?.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் திடீரென பட்டப்பகலில் உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 25 குடிமக்களும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தியா எப்போது பதில் தாக்குதலை நடத்தும் என்றே அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சூழலில் இந்தியா நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. ஒன்பது இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தாலும், பஹாவல்பூர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது மிக துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது. 

பஹாவல்பூர் மீது தாக்குதல் நடத்தியது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது ?

பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தானிலேயே, பயங்கரவாதிகளுக்கு சொர்க்கபூமியாக பார்க்கப்படும் இடம் என்றால், பஹாவல்பூர் தான்‌. பஹவல்பூரில் உஸ்மான்-ஓ-அலி வளாகத்தைத் தலைமை இடமாகக் கொண்டு, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது செயல்பட்டு வருவதாக நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகளின் சொர்க்க பூமி 

ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) தீவிரவாத அமைப்புக்கு பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு மறைமுகமாக நிதி உதவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்தப் பகுதியில் தான், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஆட்சேர்ப்பு, நிதி திரட்டுதல் போன்ற பணிகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று இங்கிருந்து சர்வதேச போதை கடத்தல் கும்பலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதத்திற்கு நிதிகளை திரட்ட இந்த போதை பொருட்களை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புடன் நடைபெறும் தீவிரவாத பயிற்சி 

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மௌலானா மசூத் அசார், பஹவல்பூரில் பலத்த பாதுகாப்புடன் வசித்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இங்கு உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் சுமார் 500க்கு மேற்பட்டோர் பயிற்சி எடுக்கும் வசதிகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தொடர்ந்து ஆக்டிவாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல்களை இந்த தீவிரவாத அமைப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது நடைபெறும் பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு, நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் இந்த தீவராத அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தான் இந்தப் பகுதியை மையமாக வைத்து, இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget