மேலும் அறிய

Train Accident: பிஹாரில் அதிர்ச்சி சம்பவம்.. எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. 4 பேர் உயிரிழப்பு

பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் நிகழ்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் நிகழ்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்று ரயில்கள். சாமானிய மக்கள் முதல் மிகப்பெரிய வசதி படைத்தவர்கள் வரை ரயில் பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். குறைவான கட்டணம், அலுப்பில்லாத பயணம், குறித்த நேரத்தில் சென்றடையலாம் என பல காரணங்களால் ரயில் பயணத்தை தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். கோடிக்கணக்கில் வருவாய் தரும் ரயில்வே துறையில் பொதுமக்கள் வசதிக்காக புறநகர் மின்சார ரயில் தொடங்கி தற்போதைய வந்தே பாரத் வரை விதவிதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இத்தகைய பயணத்தில் சில ரயில்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது வழக்கம். முறையற்ற தண்டவாள பராமரிப்பு, ஊழியர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரயில் விபத்தானது ஏற்படுகிறது. நடப்பாண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் அருகே 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தை கண்டு இந்திய மக்களே சோகத்தில் உறைந்தனர். 

இப்படியான நிலையில் மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள  ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. நேற்று (அக்டோபர் 11) இரவு 9.30 மணியளவில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் விடிய விடிய நடவடிக்கைகள் தொடர்ந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற மத்திய அமைச்சரும், பக்சர் தொகுதி எம்பியுமான அஸ்வினி சௌபே கூறுகையில், "இது ஒரு சோகமான சம்பவம். ரயில் விபத்தில் 4 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்” என தெரிவித்தார். மேலும், “இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அருகிலுள்ள மக்கள் மீட்பு பணியில் வந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். விபத்து பின்னணியில் உள்ள காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். 

இந்நிலையில் ரயில் விபத்தில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.  விபத்துக்குள்ளான ரயிலில் உள்ள பயணிகள் வேறொரு சிறப்பு ரயிலுக்கு மாற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Embed widget