மேலும் அறிய

NIA Raids: 3 மாநிலங்கள்.. 40 இடங்களில் சோதனை ஏன்..? அதிகாரப்பூர்வ விளக்கமளித்த என்.ஐ.ஏ.!

கோவை கார் குண்டு- மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது. 

கோவை கார் குண்டு- மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது. 

சோதனையில் ரூ.4 லட்சம் மற்றும் மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது. 

சென்னை, நெல்லை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்பட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டிவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 60 இடங்களில் சோதனை நடத்தியது.

60 இடங்களில் நடைபெற்ற சோதனை:

கோவையில் கடந்தாண்டு உக்கடத்தில் நடைபெற்ற கார் வெடிப்பு விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், வெடித்து சிதறிய காரில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டு மருந்து பொருட்கள் இருந்ததை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், சில முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 60 இடங்களில் என்,ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி, கோவை,சென்னை:

தமிழ்நாட்டில் சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி ஆகிய பகுதிகளிலும், கோவையில் 15 இடங்களிலும், திருநெல்வேலியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் கரிக்காதோப்பு பகுதியில் அன்வர்தீன் என்பவரது வீட்டில் அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். 

இவரது வீட்டில் வங்கிப்பணப்பரிவர்த்தனைக்கும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை அவரிடம் இருந்து என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோவை, சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் இதுவரை பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, திருநெல்வேலி மாவட்டத்தில் கரிக்காதோப்பு பகுதி மட்டுமின்றி ஏர்வாடியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவையில் கடந்தாண்டு அக்டோபர் 23 ம் தேதி நடைபெற்ற உக்கடம் அருகே கார் வெடித்த வழக்கில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனை ஜமேசா முபின் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget