மேலும் அறிய

Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு

Railway New Rules: ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு புதிய விதிகளை வகுத்துள்ளது.

Railway New Rules: டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் 18 பேர் உயிரிழந்த நிலையில், புதிய விதிகளை ரயில்வே நிர்வாகம் வகுத்துள்ளது.

ரயில் போக்குவரத்து:

நாட்டின் தினசரி ரயில் போக்குவரத்தில் ரயில்வே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புறநகர் ரயில் சேவை தொடங்கி, தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே டெல்லி வரை இணைப்பதில் ரயில் சேவை முதன்மையானதாக விளங்குகிறது. தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயில், அண்மைக்காலமாகவே அடுத்தடுத்து விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. பல சர்ச்சைகளும் சூழ்ந்து வருகின்றன. அதற்கு உதாரணமாக தான், கடந்த மாதம் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலாகும். அந்த கோர சம்பவத்தில் 18 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை: 

விபத்துகள் மட்டுமின்றி ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் அத்துமீறல், நகை பறிப்பு, தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எனவே, ரயில் பயணிகளின் பாதுகப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் தான், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க,  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அதன் முடிவில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

60 ரயில் நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்:

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள 60 ரயில் நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் (Confirmed Tickets) உள்ள பயணிகளுக்கு மட்டுமே நடைமேடை அணுகலை (Platform access) வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் சென்னை சென்ட்ரல், பெங்களூரு சிட்டி, ஹவுரா சந்திப்பு, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் புது தில்லி ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கும் என கூறப்படுகிறது. பெருநகரங்களில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதால், அங்கு கட்டாயம் இந்த விதிகள் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது. ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா உள்ளிட்ட பல நிலையங்களில் இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய நடைமுறை என்ன?

ரயில்வே நிர்வாகத்தின் புதிய விதிகள் அமலுக்கு வந்தவுடன், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளும், டிக்கெட் இல்லாதவர்களும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு வெளியே குறிப்பிட்ட பகுதிகளில் காத்திருக்க வேண்டியிருக்கும். ரயில்கள் வரும்போது மட்டுமே பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெரிய ரயில் நிலையங்களில் வார் ரூம்கள் அமைக்கப்படும். கண்காணிக்க இந்த நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகளுடன், நிலையத்தின் திறன் மற்றும் ரயில்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து டிக்கெட் விற்பனையின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு இருக்கும்.

அமலுக்கு வரவுள்ள மற்ற நடவடிக்கைகள் என்ன?

  • 1) ரயில்வே ஊழியர்கள் மற்றும் சேவைப் பணியாளர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்
  • அவசர காலங்களில் உதவி பெற ரயில்வே ஊழியர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடிய சீருடைகள் விநியோகிக்கப்படும்
  • பிளாட்பாரங்கள் மற்றும் நிலையங்களுக்கு அங்கீகரிக்கப்படாத நுழைவு வாசல்கள் சீல் வைக்கப்படும்
  • 12 மீட்டர் (40 அடி) அகலம் மற்றும் 6 மீட்டர் (20 அடி) அகலம் கொண்ட இரண்டு புதிய நடைபாதை மேம்பால வடிவமைப்புகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்
  • இந்த நிலையங்களில் மூத்த அதிகாரிகள் நிலைய இயக்குநர்களாக நியமிக்கப்படுவார்கள், அவர்கள் இடத்திலேயே முடிவுகளை எடுக்கவும் நிதி சார்ந்த விஷயங்களைக் கையாளவும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள்
  • நிகழ்நேர ஒருங்கிணைப்புக்காக புதிய தலைமுறை டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படும்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget