மேலும் அறிய

வங்கக்கடலில் புதிய புயல்; தமிழகத்தில் மழை உண்டா?

நாளை முதல் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெழுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதாவது வங்கக்கடலில் மேற்கு அந்தமான் கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ஆம் தேதிக்குள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக வலுப் பெற்று வரும் 26ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால் ஒடிசா அல்லது மேற்கு வங்க கடற்பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டில் டவ்தே புயலக்கு பிறகு உருவாக போகும் இரண்டாவது புயல் இதுவாகும். 


வங்கக்கடலில் புதிய புயல்; தமிழகத்தில் மழை உண்டா?

இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறினால் அதற்கு ஓமன் நாடு கொடுத்த 'யாஸ்' என்ற பெயர் வைக்கப்படும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் சூழலால் மீனவர்கள் யாரும் வரும் 21ஆம் தேதி முதல் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கெனவே சென்றவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் தென்மேற்கு பருவமழை எப்போதும் முதலில் மே  25ஆம் தேதி முதல் அந்தமான் பகுதியில் தொடங்கும். இம்முறை நாளை முதல் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் புதிய புயல்; தமிழகத்தில் மழை உண்டா?

இந்நிலையில் புதிதாக தோன்றும் புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் புயல், தன் நிலையை மாற்றினால் மட்டுமே தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கும் என தெரிகிறது. தற்போது தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டவ்தே புயலால் பரவலான மழையை பெற்றன. ஆனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கோடை வெயிலில் தவித்து வருகின்றன. ஒரு வேளை இந்த புயல் தமிழகத்திற்கு மழை அளிக்கும் பட்சத்தில் அது வடமாவட்டங்களுக்கு பயனளிக்கலாம். இருப்பினும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வானிலை மையம் சார்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா.. பாகிஸ்தான் செயலால் ஷாக்
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா
Duraimurugan : ”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..? முழு பின்னணி..!
”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..?
Defence Ministry Explanation: இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
"போர் வேணாம்" இந்திய, பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கி தவிக்கும் கிராமங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhitaபதிலடியா? பீகார் தேர்தல் உத்தியா?”தீவிரவாதத்துக்கு பொறுப்பு மோடி?”நெருக்கும் எதிர்க்கட்சிகள் | india attack pakistanPAK-ஐ கதறவிட்ட சிங்கப்பெண்கள்! Operation Sindoor HEROINES யார் இந்த சோபியா & வியோமிகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா.. பாகிஸ்தான் செயலால் ஷாக்
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா
Duraimurugan : ”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..? முழு பின்னணி..!
”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..?
Defence Ministry Explanation: இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
"போர் வேணாம்" இந்திய, பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கி தவிக்கும் கிராமங்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; கண்ணீர் விட்ட மாற்றுத்திறன் மாணவர்- கரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; கண்ணீர் விட்ட மாற்றுத்திறன் மாணவர்- கரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
ஆபரேஷன் சிந்தூர் டைட்டில் எங்களுக்குதான்...போரை வைத்து கல்லா கட்ட தொடங்கிய பாலிவுட்
ஆபரேஷன் சிந்தூர் டைட்டில் எங்களுக்குதான்...போரை வைத்து கல்லா கட்ட தொடங்கிய பாலிவுட்
Mayank Agarwal: இதுதான் லாஸ்ட் சான்ஸ்! மயங்க் அகர்வால் மாஸ் காட்டுவாரா? மங்கிப்போவாரா?
Mayank Agarwal: இதுதான் லாஸ்ட் சான்ஸ்! மயங்க் அகர்வால் மாஸ் காட்டுவாரா? மங்கிப்போவாரா?
Minister Durai Murugan: தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் - தூக்கி அடிக்கப்பட்ட துரைமுருகன், ரகுபதி
Minister Durai Murugan: தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் - தூக்கி அடிக்கப்பட்ட துரைமுருகன், ரகுபதி
Embed widget