மேலும் அறிய

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறை.. விஞ்ஞானிகளின் அசாத்திய கண்டுபிடிப்பு.. அடடே!

புற்று நோய்-க்கு தற்போது அளிக்கப்படும் வைத்தியத்திற்கு பொருந்ததாக நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ முறை சிறப்பான மருத்துவமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்ஏ-வின் சேதத்தை சரி செய்ய உதவும் என்சைம்களை (enzyme) செயல்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புற்று நோய்-க்கு தற்போது அளிக்கப்படும் வைத்தியத்திற்கு பொருந்ததாக நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ முறை சிறப்பான மருத்துவமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறை:

தற்போதுள்ள காம்ப்டோதெசின், டோபோடெக்கான், இரினோடெகான் போன்ற கான்சர் எதிர்ப்பு மருந்துகள் டோபோஐசோமெரேஸ் 1 (டாப் 1) எனப்படும் டி.என்.ஏ பிரதிபலிப்பு மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கு முக்கியமான ஒரு நொதியை (enzyme) எதிபார்க்கின்றன.

புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் இத்தகைய ஒற்றை-தன்மை சிகிச்சைகளுக்கு எதிர்ப்பை உருவாக்குகின்றன. எனவே, மாற்று சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற சிகிச்சை முறைகளை ஆராய்வதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான கொல்கத்தாவின் இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்க விஞ்ஞானிகள், உயிரணுப் பிரிப்பின் போது புற்றுநோய் செல்கள் டி.என்.ஏவை எவ்வாறு சரிசெய்கின்றன மற்றும் டாப் 1 என்ற நொதியை குறிவைக்கும் கீமோதெரபிக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.

அறிவியலின் அடுத்த உச்சம்:

எம்போ ஆராய்ச்சி இதழ் 2024-ல் வெளியிடப்பட்ட ஆய்வு இரண்டு முக்கிய புரதங்களை எடுத்துக்காட்டுகிறது . அவை  சைக்ளின்-சார்ந்த கைனேஸ் 1 (CDK1) மற்றும் டைரோசில்-டிஎன்ஏ பாஸ்போடிஸ்டெரேஸ் 1 (TDP1). ஆகும். பேராசிரியர் பேனு பிரதா தாஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், டி.என்.ஏ பழுது நீக்கும் நொதியான டி.டி.பி 1 -ஐ செயல்படுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்கள் தற்போதுள்ள மருந்துகளின் விளைவை எதிர்க்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர்.

உயிரணுப் பிரிப்பின் போது புற்றுநோய் செல்கள் டி.என்.ஏவை எவ்வாறு சரிசெய்கின்றன மற்றும் டோபோஐசோமெரேஸ் 1 (டாப் 1) என்ற நொதியால் தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்திற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை ஆராயும் போது, விஞ்ஞானிகள் டி.என்.ஏ பழுது நீக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் சி.டி.கே 1 மற்றும் டி.டி.பி 1 புரதங்களின் முக்கியமான பாத்திரங்களை கண்டுபிடித்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களிடையே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றன. பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 131 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் உள்ளன. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget