மேலும் அறிய

NDTV Founders : என்டிடிவியை விற்றதால் கோடி கணக்கில் கைமாறப்போகும் பணம்...அடுத்து என்ன?

ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு என்டிடிவியில் 29.18 சதவிகித பங்குகள் இருந்தன. 

இந்தியாவில் செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் என்டிடிவி. இந்த நிறுவனத்தை திறம்பட நிர்வகித்தவர்கள் அதன் நிறுவனர்களான பிரனாய் ராயும் ராகிகா ராயும். 

நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் வட்டி இல்லா கடனை விசிபிஎல் என்ற நிறுவனத்திடம் பிரனாய் ராய், ராதிகா ராயுக்கு சொந்தமாக உள்ள நிறுவனமான ஆர்ஆர்பிஆர் நிறுவனம் வாங்கியது.

இந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம்தான், என்டிடிவியின் பெரும்பாலான பங்குகளை வைத்திருந்தது. இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியின் மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த விசிபிஎல் நிறுவனத்திடம் இருந்து 400 கோடி ரூபாய் கடனை இரண்டு தவணையாக ஆர்ஆர்பிஆர் நிறுவனம் பெற்றது.

கடன் ஒப்பந்தத்தின்படி, பிரனாய் ராயும் ராதிகா ராயும் தங்களின் 29.18 சதவிகித பங்குகளை ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திற்கு வழங்கினர்.

கடனை திருப்பி செலுத்தாவிட்டால், ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 99.9 சதவிகித பங்குகள் விசிபிஎல் நிறுவனத்திற்கு செல்லும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடன் வாங்குவதற்கு முன்பாக பிரனாய் ராயும் ராதிகா ராயும் என்டிடிவியின் 55 சதவிகித பங்குகளை வைத்திருந்தனர்.

கடன் வாங்கிய பிறகு, அவர்கள் நேரடியாக 32.26 சதவிகித பங்குகளை வைத்திருந்தனர். 12 ஆண்டுகள் ஆன பிறகும், வாங்கிய கடன் பிரனாய் ராயும் ராதிகா ராயும் கடனை திருப்பி செலுத்தவில்லை.

இச்சூழலில்தான், சமீபத்தில், அதானி குழுமத்தின் துணை நிறுவனமாக உள்ள ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், அம்பானியின் விசிபிஎல் நிறுவனத்தை வாங்கியது. நிறுவனத்தை வாங்கிய உடனே கடன் ஒப்பந்தத்தின்படி என்டிடிவி பங்குகளை பெறும் உரிமையை ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் பயன்படுத்தி கொண்டது.

அதன் வழியாக, 29.18 சதவிகித பங்குகள் அதானியின் நிறுவனத்திற்கு சென்றது. மேலும், கூடுதலாக 27.26 சதவிகித பங்குகளை வாங்க அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதை ஏற்றுகொண்டுள்ள பிரனாய் ராயும் ராதிகா ராயும் தங்களின் பங்குகளை விற்க சம்மதம் தெரிவித்தனர். 

இந்த பங்குகளை விற்றதன் மூலம் பிரனாய் ராயுக்கும் ராகிகா ராயுக்கும் 602 கோடி ரூபாய் கிடைக்க உள்ளது. அதாவது ஒரு பங்கிற்கு, 342.65 ரூபாய் கிடைக்க உள்ளது. ஏற்கனவே, ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு என்டிடிவியில் 29.18 சதவிகித பங்குகள் இருந்தன. 

பின்னர், திறந்த சலுகை (Open offer) மூலம் 56.45 சதவீத பங்குகளை பெற்றன. அதானி எண்டர்பிரைசஸின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள துணை நிறுவனமான விசிபிஎல், என்டிடிவியில் கூடுதலாக 8.27% ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்கிறது.

எனவே மொத்தமாக, என்டிடிவியில் அதானி எண்டர்பிரைசஸின் ஒட்டுமொத்த பங்குகள் 64.72 சதவிகிமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், பிரனாய் ராயும் ராதிகா ராயும் முழு நேர இயக்குநர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் நிர்வாக இணைத் தலைவர்களாக இருந்தனர்.

இவர்களை தவிர, டேரியஸ் தாராபோர்வாலா நிர்வாகமற்ற, சுதந்திரமற்ற இயக்குநர் பதவியிலிருந்தும், கௌசிக் தத்தா, இந்திராணி ராய் மற்றும் ஜான் மார்ட்டின் ஓ'லோன் ஆகியோர் நிர்வாகமற்ற, சுயாதீன இயக்குநர்கள் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
Embed widget