மேலும் அறிய

"பாதுகாப்பு தாங்க.. இல்லனா வேலை செய்யமாட்டோம்" தேசிய அளவில் தீவிரமாகும் மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம் எடுக்கும் மருத்துவர்கள் போராட்டம்: மருத்துவமனைகளில் உள்ள நார்மல் வார்டுகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பயிற்சி மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA) நேற்றே அறிவிப்பு வெளியிட்டுவிட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டாவுக்கு FORDA சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே பயிற்சி மருத்துவருக்கு இவ்வளவு மோசமான அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது இல்லை என கொல்கத்தா பயிற்சி மருத்துவர் சம்பவத்தை குறிப்பிட்டுள்ளது. பணியில் இருக்கும் பெண் மருத்துவரின் கண்ணியத்தையும் உயிரையும் பாதுகாக்க முடியாத சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும், இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களுக்கு என பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள், உறவினர்கள் அவதி: இந்த வழக்கில் நீதி கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்கத்தாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் பல நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க மருத்துவர் கொலையை கண்டித்து வெளிநோயாளிகள் பிரிவுக்கு பேரணியாக சென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேஜே மருத்துவமனை, சியோன் மருத்துவமனை, நாயர் மருத்துவமனை மற்றும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையிலும் போராட்டம் நடந்து வருகிறது.

கொல்கத்தா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, டெல்லி எய்ம்ஸ்-இல் தினசரி அறுவை சிகிச்சைகள் 80 சதவீதமும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மக்கள் சேர்வது 35 சதவீதமும் குறைந்துள்ளன.

கொல்கத்தா சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தடுப்பு நடவடிக்கையாக மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget