மேலும் அறிய

Rocketry Nambi : நானும், அப்துல் கலாமும் செய்த காமெடி.. நிஜ ராக்கெட்ரி நாயகன் நம்பி நாராயணன் சொன்ன சீக்ரெட்

ஆனால் அவர்கள் பங்களிப்புக்கு ஏற்ப மரியாதை செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

விக்ரம் ஏ சாராபாய், சதீஷ் தவான், யு. ஆர். ராவ், டி.என்.சேஷன் போன்றோர் அவரவர் துறையில் வியத்தகு புதுமைகளை செய்தவர்கள். ஆனால் அவர்கள் பங்களிப்புக்கு ஏற்ப மரியாதை செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகர் மாதவன் இயக்கத்தில்  ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற படம் வெளியானது. இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் அவரே கையாண்டார். இந்தப் படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நம்பி நாராயணனை மக்களுக்கு அடையாளப்படுத்தியுள்ளது.

நீங்கள் யார் என்று கேட்டேன்:

இந்நிலையில் நம்பி நாராயணன் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், முதன்முதலில் நான் விக்ரம் சாராபாயை பார்த்தபோது நீங்கள் யார் என்று கேட்டேன். அவர், என்னை விக்ரம் என்று அழைப்பார்கள் என்று சொன்னார். அப்போது கூட எனக்கு அவர் தான் விக்ரம் ஏ சாராபாய் என்பது தெரியவில்லை. அவர் அங்கிருந்து சென்றவுடன் கலாம் என்னிடம், என்னய்யா இப்படி கேட்டுட்ட. அவர் தான் விக்ரம் ஏ சாராபாய் என்றார். உண்மையில் அவர் விண்வெளித் துறைக்கு செய்தவை எல்லாம் வியத்தகு வகையறா. இப்போது ககன்யான் திட்டத்தை செயல்படுத்தக் கூட அவரது கான்செப்ட் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

ஆனால் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. விக்ரம் ஏ சாராபாய், சதீஷ் தவான், டி.என்.சேஷன் போன்றோர் அவரவர் துறையில் வியத்தகு புதுமைகளை செய்தவர்கள். ஆனால் அவர்கள் பங்களிப்புக்கு ஏற்ப மரியாதை செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. வெளிநாடுகளைப் போல் அவர்களுக்கு எல்லாம் அவ்வளவு பெரிய சம்பளமும் இல்லை. ஆனாலும் அவர்கள் அவ்வளவு செய்திருக்கிறார்கள். 1973ல் நான் விகாஸ் என்று ஒரு இன்ஜினுக்கு பெயர் வைத்தேன். அப்போது எல்லோரும் அதற்கு அர்த்தம் கேட்டனர். நான் வளர்ச்சி என்ற அதன் அர்தத்தை சொன்னேன். ஆனால் உண்மையில் நான் மனதில் நினைத்தது விக்ரம் ஏ சாராபாய் என்பதன் சுருக்கும். உண்மையில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி.என்.சேஷன் இவர்களின் பங்களிப்பு எல்லாம் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை. இவர்களைப் பற்றியும் மக்கள் அறியச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் பாடப்புத்தகங்களிலாவது இவர்களைப் பற்றி நாம் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு நம்பி நாராயணன் பேசியுள்ளார்.


Rocketry Nambi : நானும், அப்துல் கலாமும் செய்த காமெடி.. நிஜ ராக்கெட்ரி நாயகன் நம்பி நாராயணன் சொன்ன சீக்ரெட்

யார் இந்த நம்பி நாராயணன்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியாற்றி கடந்த 2001-ல் ஓய்வு பெற்றவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். க்ரோயோஜெனிக் எனப்படும் திரவ எரிபொருள் தயாரிப்பு தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து பெற இந்தியா முயற்சித்தது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், ரஷ்யா தொழில்நுட்பப் பகிர்வில் பின்வாங்கியது. இதனையடுத்து இந்தியா தானாகவே திரவ எரிபொருளை உருவாக்க முயன்றது. 1970களின் ஆரம்ப காலத்தில், அப்துல் கலாம் குழுவில் பணியாற்றிய போது, ஏவுகனை திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்தார். இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு. ஆர். ராவ் ஆகியோரின் ஆதரவுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கிய மைல் கல்லான திரவ எரிபொருளை தயாரித்து திருப்புமுனையை ஏற்படுத்திய நம்பி நாராயணன், கடந்த 1994-ல் கைது செய்யப்பட்டார். இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாகவும் அந்த நாடுகளுக்காக உளவு பார்த்ததாகவும் கூறி கேரள போலீஸார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இஸ்ரோ க்ரியோஜெனிக் தொழில்நுட்பம் குறித்து சில ஆவணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். அவருடன் விஞ்ஞானிகள் பி.சசிகுமார், கே.சந்திரசேகரன், ஒப்பந்ததாரம் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 4 ஆண்டு காலமாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பி நாராயணன் ஏராளமான கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பின்னரே நம்பி நாராயணன் மீது போலியாக அடிப்படை ஆதாரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது உறுதியானது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget