மேலும் அறிய

எத்தனை சிம்கார்டுகள் வச்சிருக்கீங்க? இனி சிறைதான்! புது சட்டம் கொண்டுவந்த அரசு! விதிகள் இதுதான்! 

இதை பயன்படுத்திக்கொள்ளும் சில குற்றவாளிகள் சிம்கார்டுகளை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி விடுகின்றனர்.

ஒருவர் பெயரில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. 

தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வியாபார யுக்திகளை பெருக்க பல ஆஃபர்களை வாரி இறைத்து வருகிறது. அந்த வகையில் சிம்கார்டுகள் பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகிறது. ஃப்ரீயாதானே கிடைக்கிறது என்ற எண்ணத்தில் வாடிக்கையாளர்களும் பல சிம்கார்டுகளை வாரிக்குவிக்கின்றனர். 

இதை பயன்படுத்திக்கொள்ளும் சில குற்றவாளிகள் சிம்கார்டுகளை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி விடுகின்றனர். இதனால் நாட்டில் பல குற்ற சம்பவங்களுக்கு தொலைபேசியே காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இதை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு புது சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய நெறிமுறைகளில் ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்டோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்வரை அபராதம் விதிக்க முடியும். அதேபோல் அசாம், ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் மட்டுமே தங்களது பெயர்களில் வைத்திருக்க முடியும் என புதிய சட்டம் சொல்கிறது. 

ஒருவர் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருந்து முதல் முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுமாம். இதேபோல் ஒருவரை ஏமாற்றி அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டுகள் உபயோகப்படுத்தியது தெரியவந்தாலோ சட்டவிரோதமாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலோ, தொலைதொடர்பு சேவைகளை தடை செய்யும் சாதனங்கள் வைத்திருந்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம்  வழிவகை செய்கிறது. 

இதுமட்டுமில்லாமல் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சில விதிகளை இந்த சட்டம் அமல்படுத்துகிறது. அதாவது வணிக செய்திகளை பயணரின் அனுமதி இன்றி அனுப்பினால் அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துஉ ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget