மேலும் அறிய

Mullaperiyar Dam: 142 அடியை எட்டிய முல்லை பெரியார் நீர்மட்டம்.. விடுக்கப்பட்டது இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் கேரள பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் கேரள பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்மட்டம் உயர்வு.

காலை 10 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 142 அடியைத் தொட்டதால் "மூன்றாவது மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை" விடுக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக, கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

காலை 7 மணிக்கு பதிவான 141.95 அடியில் இருந்து 10 மணிக்கு 142 அடியாக பதிவான நீர்மட்டத்தை எட்ட 3 மணி நேரம் ஆனது. சுரங்கப்பாதை வெளியேற்றம் 750 கனஅடியாகவும், சராசரி நீர்வரத்து 1,687.5 கனஅடியாகவும், சேமிப்பு கொள்ளளவு 7,666 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 141 அடியை எட்டியிருந்தது . நீர்வரத்து வினாடிக்கு 1,166 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மத்திய நீர்வள ஆணைய அமலாக்கத்தின் ரூல்கர்வ் முறைப்படி, இந்த மாதம் (டிசம்பர்) முதல் அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நேற்று அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால், தமிழக பொதுப்பணித்துறையினர், கேரள மாநிலம் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதி மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது கேரள பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது, இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்று பொதுப்பணித்துறையினர் ஏற்கனவே தெரிவித்தனர். அதன்படி இன்று 142 அடி எட்டியவுடன் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 127 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை, கேரளா மற்றும் தமிழகம் இடையே பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரிய விவகாரமாகவே இருந்து வருகிறது.    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget