மேலும் அறிய

எம்.பி. மகனின் ஆடையை கழற்ற வைத்த விமான நிலைய அதிகாரிகள்..! என்ன நடந்தது தெரியுமா..?

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதியமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளதாக எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பிய தனது மகன், சமீபத்தில் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் ஆடைகளை அகற்றி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வி. அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதியமைச்சருக்கு இது தொடர்பாக புகார் அனுப்பியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். பணியில் இருந்த சுங்க அதிகாரிகள் அதிகாரத்தை மீறி, தனது மகனை அனந்தபுரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவரின் ஆடைகளை அகற்றி சோதனை செய்ததாகவும் விமான நிலையத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு முன்பு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய அவர், "எனக்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அத்தகைய தீவிர நடவடிக்கைக்கு மாஜிஸ்திரேட்டின் ஒப்புதல் தேவை. இது ஒருவரின் தனியுரிமைக்கான உரிமையை மீறும் செயலாகும். சுங்க விதிகளில் அதற்கான நடைமுறைகள் இருந்தாலும் சுங்க அதிகாரிகள் அதை தானாகவே செய்ய முடியாது" என்றார்.

 

மாநிலங்களவை உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு சுங்கத்துறை அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை. விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் தங்கள் கடமையை மட்டுமே செய்வதாகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர் ஒருவர் பேசுகையில், "அதிகாரிகள் தங்கள் கடமையை செய்தனர். விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் முயற்சியில் ஏஜென்சி தீவிரம் காட்டி வருகிறது" என்றார்.

இதற்கிடையில், சில உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், சுங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, "வஹாப் மகனின் ஆடை கழற்றப்படவில்லை. அவரின் மகனுக்கு எதிராக சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதை வஹாப் மறுத்துள்ளார். மருத்துவமனையில் தனது மகன் ஆடையை அகற்றி சோதனையிட்டதாகவும், சுற்றறிக்கை பற்றி எதவும் சொல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில், வஹாப் ஒரு நிகழ்வில் உரை நிகழ்ச்சியபோது இந்த சம்பவம் குறித்து பேசியிருந்தார். அவர் தனது உரையில், தனது மகன் தாடியுடன் இருந்ததால், தனது மகனின் தோற்றம் சுங்கத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget