மேலும் அறிய

Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!

4 மாதக் குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் தூக்கி எறிந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 மாதக் குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் தூக்கி எறிந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்குகள் அட்டூழியம்:

உத்தரப்பிரதேச மாநிலம் பரேய்லியில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபாத்யயா. இவருக்கு நான்கு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது மூத்த மகனின் பிறந்த நாளன்று அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மாலை வீட்டில் மின் தடை ஏற்பட்டதால் வீட்டினுள் புழுக்கம் ஏற்பட்டதையடுத்து, காற்றுவாங்குவதற்காக குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். திடீரென்று குரங்குகள் கும்பலாக வர, அதில் இரண்டு குரங்குகள் அவரைத் தாக்கியுள்ளன. பின்னர் அவர் கையில் இருந்து குழந்தையைப் பறித்த குரங்குகள், அதைத் தூக்கிச் சென்று மாடியில் இருந்து தூக்கிப்போட்டுள்ளன. அப்போது குழந்தையை காப்பாற்றும் படி நிர்தேஷ் அலறியுள்ளார். கீழே சென்று பார்த்தபோது குழந்தை ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆய்வு தேவை:

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி சமீர் குமார் “இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற செயல்கள் இயல்பானவை அல்ல. இதனை நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இருந்து குரங்குகளை விரட்டியடிக்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. உள்ளூர்வாசிகளும் இதற்கு அனுமதி பெற்று குரங்குகளை விரட்ட எங்களுக்கு உதவலாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!

இதற்கு முன்பும் பல சம்பவங்கள்:

இதுபோன்று குரங்குகள் குழந்தையை கொல்வது இது முதல்முறை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி இதே பரேய்லியில் உள்ள பிச்புரி கிராமத்தில் 5வயது குழந்தையை குரங்குகள் பறித்துச் சென்றுள்ளன. குரங்குகளின் செயலால் குழந்தையின் தோல்கள் கிழிந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற நிலையில், அதிக ரத்தம் வெளியேறியதால் அந்த குழந்தையும் உயிரிழந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான்பூரில் உடைந்திருந்த சுவற்றில் இருந்த செங்கற்களை குரங்குகள் தள்ளியதால் அந்த பெண் மற்றும் அவரது 4 குழந்தைகள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!

அதிகரிக்கும் குரங்கு தாக்குதல்:

குரங்குகள் சாதுவான விலங்காகக் கருதப்பட்டு வந்த நிலையில் அது கும்பலாக சேரும்போது ஆட்கொல்லிகளாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைக் கொல்வதும், காயப்படுத்துவதும், சாலையில் செல்வோரை விரட்டி தாக்குவதும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது.

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Embed widget