மேலும் அறிய

Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!

4 மாதக் குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் தூக்கி எறிந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 மாதக் குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் தூக்கி எறிந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்குகள் அட்டூழியம்:

உத்தரப்பிரதேச மாநிலம் பரேய்லியில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபாத்யயா. இவருக்கு நான்கு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது மூத்த மகனின் பிறந்த நாளன்று அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மாலை வீட்டில் மின் தடை ஏற்பட்டதால் வீட்டினுள் புழுக்கம் ஏற்பட்டதையடுத்து, காற்றுவாங்குவதற்காக குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். திடீரென்று குரங்குகள் கும்பலாக வர, அதில் இரண்டு குரங்குகள் அவரைத் தாக்கியுள்ளன. பின்னர் அவர் கையில் இருந்து குழந்தையைப் பறித்த குரங்குகள், அதைத் தூக்கிச் சென்று மாடியில் இருந்து தூக்கிப்போட்டுள்ளன. அப்போது குழந்தையை காப்பாற்றும் படி நிர்தேஷ் அலறியுள்ளார். கீழே சென்று பார்த்தபோது குழந்தை ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆய்வு தேவை:

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி சமீர் குமார் “இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற செயல்கள் இயல்பானவை அல்ல. இதனை நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இருந்து குரங்குகளை விரட்டியடிக்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. உள்ளூர்வாசிகளும் இதற்கு அனுமதி பெற்று குரங்குகளை விரட்ட எங்களுக்கு உதவலாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!

இதற்கு முன்பும் பல சம்பவங்கள்:

இதுபோன்று குரங்குகள் குழந்தையை கொல்வது இது முதல்முறை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி இதே பரேய்லியில் உள்ள பிச்புரி கிராமத்தில் 5வயது குழந்தையை குரங்குகள் பறித்துச் சென்றுள்ளன. குரங்குகளின் செயலால் குழந்தையின் தோல்கள் கிழிந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற நிலையில், அதிக ரத்தம் வெளியேறியதால் அந்த குழந்தையும் உயிரிழந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான்பூரில் உடைந்திருந்த சுவற்றில் இருந்த செங்கற்களை குரங்குகள் தள்ளியதால் அந்த பெண் மற்றும் அவரது 4 குழந்தைகள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!

அதிகரிக்கும் குரங்கு தாக்குதல்:

குரங்குகள் சாதுவான விலங்காகக் கருதப்பட்டு வந்த நிலையில் அது கும்பலாக சேரும்போது ஆட்கொல்லிகளாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைக் கொல்வதும், காயப்படுத்துவதும், சாலையில் செல்வோரை விரட்டி தாக்குவதும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget