மேலும் அறிய

Crime : கணவர், வளர்ப்பு மகனால் பாலியல் வன்கொடுமை..! கருணை கொலை செய்ய கெஞ்சிய இளம்பெண்..

கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 30 வயது பெண், அவரது வளர்ப்பு மகன், கணவர் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

நீதித்துறையில் தான் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், "நீதியின் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், அக்டோபர் 9 அன்று புரான்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.

விவாகரத்து செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் சண்டிகரைச் சேர்ந்த 55 வயது விவசாயி ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். சிறிது நாள்கள் கழித்து, இரண்டாவது கணவரின் மகன் என்னை அணுகி தகாத உறவுக்கு வற்புறுத்தினார். மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் என்னை மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து, அவர் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தார். பின்னர், அவர் அடிக்கடி அணுகி பாலியல் வன்கொடுமை செய்தார். நான் கர்ப்பமாகி, டிஎன்ஏ பரிசோதனைக்கு செல்ல விரும்பினேன். ஆனால், அவர் புரான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார்.

ஜூலை 18 அன்று, நான் சண்டிகரில் உள்ள எனது கணவரின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எனது கணவர், கணவரின் நண்பர், உறவினர் மற்றும் அவரது சக ஊழியர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். புரான்பூர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். ஆனால், எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்றம் செல்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதையடுத்து, இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது" என்றார்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376 டி (கூட்டு பாலியல் வன்கொடுமை), 323 (தன்னிச்சையுடன் காயப்படுத்துதல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் புரான்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிலிபிட் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில், அவரது கணவர், அவரின் மகன் உட்பட 5 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சிக்கலான வழக்கு என்பதால் கால அவகாசம் எடுக்கிறது என்றும் அந்தப் பெண் தற்போது தனது தாய், இரண்டு சகோதரர்கள் மற்றும் அவரது ஆறு வயது மகனுடன் தங்கியுள்ளார் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget