மேலும் அறிய

”மலம் அள்ளும் பணி காரணமாக யாரும் இறக்கவில்லை” : சமூக நீதி அமைச்சகம் அளித்த அதிர்ச்சி பதில்..

`மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை’ என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை.

`மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை’ என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை. எனினும், சாக்கடை, கழிவு நீர்த் தொட்டி முதலானவற்றைக் கழுவும் போது எழுந்த நச்சு வாயு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 321 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை மீது கேள்வி எழுப்பினார்.

தனது கேள்வியில் அவர், `கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 500 பேர் மலம் அள்ளும் பணியின் காரணமாக உயிரிழந்திருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியென்றால், அதுகுறித்த விவரங்கள் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக அதனைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் என்ன? மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்ய மனிதர்களையே நியமிப்பவர்கள் மீது தண்டனை அளிக்கும் விதமாக, சட்டத்தைக் கடுமையாக்கும் எண்ணம் உள்ளதா? அப்படியென்றால் அதன் விவரங்கள் என்ன?’ என்று கேட்டுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் அதன் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர், `கடந்த 5 ஆண்டுகளாக மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. எனினும், சாக்கடை, கழிவு நீர்த் தொட்டி முதலானவற்றைக் கழுவும் போது எழுந்த நச்சு வாயு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 321 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று மத்திய சமூக நீதித் துறை சார்பாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மலம் அள்ளும் தொழிலாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் கடன் வழங்கப்படுவதாகவும்,  சுகாதாரப் பணியாளர்கள் கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்காக நவீன இயந்திரங்கள் வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், பொறியியலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு நவீன இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி ஆகியவை வழங்கப்படுவதாகவும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget