மேலும் அறிய

Manipur Case: மணிப்பூர் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி! சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப்பெற்ற உயர் நீதிமன்றம்!

மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

Manipur Case: மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. 

மணிப்பூர் கலவரம்:

தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.

மணிப்பூரில் சுமார் 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.

இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப்பெற்ற உயர் நீதிமன்றம்

 இந்த நிலையில், மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.  அதாவது, கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு மணிப்பூரில் பெரும் இன வன்முறைக்கு வழிவகுத்தது.  இதனை அடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ” மார்ச் 27, 2023 அன்று பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவின் பத்தியை நீதிமன்றம் நீக்குகிறது.

இந்த உத்தரவு கலவரத்துக்கு வழிவகுத்தது. சட்டத்தின் தவறான எண்ணத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பத்தி  உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக இருக்கிறது. எனேவே, முந்தைய உத்தரவை நீக்க வேண்டியது அவசியம் இருக்கிறது” என்று மணிப்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்ற பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடுமையாக சாடியது. அதன்படி,  "இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது. அதில் நீதிமன்றங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் மாற்றவோ, திருத்தவோ அல்லது மாற்றவோ முடியாது.  உயர் நீதிமன்ற வழங்கிய உத்தரவு தவறானது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

"எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் பெயர் - கொல்கத்தா நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
Embed widget