மேலும் அறிய

Manipur Violence: மணிப்பூரின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரன் அதிரடி மாற்றம் - காரணம் இதுதான்!

Manipur Violence: கலவர பூமியான மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Manipur Violence: மணிப்பூர் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன், கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி பணியிடமாற்றம்:

தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின், தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை பணியிடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்ன உயர்நீதிமன்றத்திற்கே தன்னை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முரளிதரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க, கடந்த ஏப்ரல் மாதம் எம்.வி. முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து தான் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே கலவரம் வெடித்தது. இதனால், தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 மாதங்களுக்குப் பின் நடவடிக்கை:

மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பே கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், அதனை செயல்படுத்துவதில் தாமதமாக அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக கவலை தெரிவித்தனர். பரிந்துரைகள் ஏற்கப்பட்டு கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் எம்.வி. முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளார்.

நிராகரிக்கப்பட்ட கோரிக்கை:

கடந்த 9ம் தேதி வெளியான கொல்கத்தா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் பரிந்துரையை எதிர்த்து, முரளிதரன் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், தன்னை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், அவர் விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்துள்ளது.  எனவே, நீதிபதி எம்.வி. முரளிதரனை கொல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்த கொலீஜியம் தீர்மானித்துள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த முரளிதரன்:

வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள மணியம்பட்டு கிராமத்தில் பிறந்தவர் முரளிதரன். 54 வயதான அவர் கடந்த 25 ஆண்டுகளாக நீதித்துறையில் உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், உயர்நிதிமன்ற மதுரைக்கிளை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் வழக்காடியுள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூரில் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்தபோது, மெய்தி இன சமூக மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இதையடுத்து மெய்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருட்களும் சேதமடைந்தன. இந்த கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என கண்டித்தது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget