மேலும் அறிய

Mamata Banerjee : பட்டாசு ஆலை விபத்து.. மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கேட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா..

பட்டாசு ஆலை விபத்து நடந்து 11 நாள்கள் ஆன நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான மம்தா, காதிகுல் கிராமத்திற்கு இன்று நேரில் சென்று மக்களிடம் மன்னிப்பு கோரினார். 

மேற்குவங்கம் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் எக்ரா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எக்ரா பகுதி மக்களிடம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பட்டாசு ஆலை விபத்து:

பட்டாசு ஆலை விபத்து நடந்து 11 நாள்கள் ஆன நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான மம்தா, காதிகுல் கிராமத்திற்கு இன்று நேரில் சென்று மக்களிடம் மன்னிப்பு கோரினார். 

விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய பிறகு பேசிய மம்தா, "இந்த சம்பவத்திற்கு (மே 16 அன்று சட்டவிரோதமாக இயங்கி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து) தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உளவுத்துறை சரியாக செயல்பட்டிருந்தால் இந்த வெடிவிபத்தை தடுத்திருக்கலாம்.

சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையை வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு ஏதேனும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுவதைக் கண்டறிந்தால், உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களை வலியுறுத்துகிறேன்" என்றார்.

மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்:

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவருக்கு ஹோம் கார்டு பணிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். மம்தாவுடன், விபத்து நடந்த பகுதிக்கு தலைமை செயலாளர் எச்.கே. திவேதியும் சென்றிருந்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று பட்டாசு ஆலையில் விபத்து நடந்துள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த பகுதிக்கு மம்தா சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 16ஆம் தேதி, எக்ராவில் நடந்த விபத்துக்கு பிறகு, 21ஆம் தேதி அன்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பட்ஜ் பட்ஜில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

விபத்து சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. என்ஐஏவிடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதை நிராகரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபி-சிஐடி தொடரும்படி கேட்டு கொண்டது.

மேற்குவங்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல், திரிணாமூல் ஆட்சி நடந்து வருகிறது. 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார் மம்தா.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget