மேலும் அறிய

இந்திராகாந்தியின் பிறந்தநாள் - மல்லிகார்ஜுன கார்கே, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை 

இந்திராகாந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் தலவைர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

 

இதேபோன்று, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

இந்திரா காந்தி தனிப்பட்ட வாழ்க்கை:

1917ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரில் இந்திரா காந்தி பிறந்தார்.  இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஐவஹர்லால் நேருவின் ஒரே மகளாவார்.  இவர் சாந்தி நிகேதனிலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்த நிலையில்,  1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1942ம் ஆண்டு ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்ட நிலையில்,  சஞ்சய் காந்தி மற்றும் ராஜிவ் காந்தி என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இந்திரா காந்தி அரசியல் வாழ்க்கை:

 1959ம் ஆண்டு இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் ஆன நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரானார். அப்போது லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார்.  அவரது மறைவையொட்டி இந்திரா பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். 

அவசர நிலை பிரகடனம்:

இவரது தலைமைக்கு எதிர்ப்புகள் கிளம்ப கட்சி இரண்டாக உடைந்தது. தொடர்ந்து 1971ம் ஆண்டு தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.  ஆனால்,  அந்த தேர்தலில் விதிமுறைகளை மீறி வெற்றி பெற்றதாக அறிவித்தது. அதன் மூலம்,  1975ம் ஆண்டு அலகபாத் நீதிமன்றம், இந்திரா காந்தி பதவி விலகி, 6 ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவிலும் இவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.  அப்போது அவர் இந்தியா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை சிறையிலடைத்தார். குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்ட பல கொள்கைகளை இந்த காலகட்டத்தில் நிறைவேற்றினார்.  இரண்டு ஆண்டுக்குப்பின் அவசர நிலை பிரகடனம் தளர்த்தப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திரா காந்தி தோற்றகடிக்கப்பட்டார்.

கொல்லப்பட்ட இந்திரா காந்தி:

ஜனதா கட்சி மெரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்ததும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இந்திரா காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பதவிக்கு வந்தார்.  1980களில் இந்தியாவின் அரசியல் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் வந்தது. மத்திய அரசிடம் இருந்து பல்வேறு மாநிலங்களும் சுதந்திரம் கேட்டன. பஞ்சாபில் சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 1982ம் ஆண்டு அவர்களின் போராட்டம் வலுக்கவே, அவர்கள் மீது ராணுவத்தை இந்திராகாந்தி ஏவினார். இதில் 450 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்குப்பின் சில மாதங்களில் டெல்லியில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில், அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget