மேலும் அறிய

SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!

2023-இல்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மறுசீரமைக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ பல்கலைக்கழக ஆசிரியர்‌ பணியாளர்களைத் தெரிவு செய்யவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

"மாநில தகுதித்‌ தேர்வு நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும்‌ உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ (டிஆர்பி) கொண்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்களின்‌ பங்களிப்புடன்‌ செட் தேர்வு நடத்தப்படும்‌" என்று உயர் கல்வித்துறை அமைச்சர்‌ கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

''தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ 1987ஆம்‌ ஆண்டு உருவாக்கப்பட்டு நாளதுவரை செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம்‌ அரசுப்‌ பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும்‌ கல்லூரிக்‌ கல்வி இயக்ககம்‌, தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌, சட்டக்‌ கல்வி இயக்ககம்‌ ஆகியவற்றின்‌ கீழ்‌ உள்ள கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள உதவிப்பேராசிரியர்களை தெரிவு செய்யும்‌ அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

முகவாண்மை நிறுவனம்

மேலும்‌, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு நடத்திடும்‌ முகவாண்மை நிறுவனமாக (Nodal Agency) அரசால்‌ நியமிக்கப்பட்டு தேர்வுகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

அத்தோடு 2023-இல்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ பல்கலைக்கழக ஆசிரியர்‌ பணியாளர்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ தெரிவு செய்யவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

1.68 லட்சம் பேர் தெரிவு

1988 முதல்‌ தற்போது வரை பல்வேறு நிலைகளில்‌ பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர்கல்வித்‌ துறைகளுக்கு 1,68,657 ஆசிரியர்கள்‌, விரிவுரையாளர்கள்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்கள்‌ இந்த தேர்வு வாரியத்தால்‌ முறையாக தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளனர்‌. இது தவிர கடந்த ஆண்டு முதலமைச்சரின்‌ அறிவிப்புக்கு இணங்க முதலமைச்சர்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்ற மாணவர்களை தேர்வு செய்ய ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தேர்வு நடத்தப்பட்டு 120 மாணவர்கள்‌ முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசால்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ மாநில தகுதித்‌ தேர்வினை (செட்) நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்கு உட்பட்டு உயர் கல்வித்துறை மற்றும்‌ பல்கலைக்கழக பாட வல்லுநர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்களை ஈடுபடுத்திக்‌ கொண்டு மேற்கண்ட தேர்வினை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ வெளிப்படைத்தன்மையுடன்‌ பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ நெறிமுறைகளைப்‌ பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளி முகமை மூலமாகவே நெட் தேர்வு

பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ மூலம்‌ நடத்த வேண்டிய தேசியத்‌ தகுதித்‌ தேர்வு (நெட்) வெளி முகமையான தேசியத்‌ தேர்வு முகமை (என்டிஏ) மூலமே நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாநில தகுதித்‌ தேர்வு (செட்) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும்‌ உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கொண்டுள்ளது. மேலும்‌, தமிழ்நாடு மின்‌ ஆளுமை நிறுவனத்துடன்‌ இணைத்து இணையவழி தேர்வு நடத்துவதற்கும்‌, நேரடித்‌ தேர்வு நடத்துவதற்கும்‌ போதுமான வசதிகளும்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ உள்ளது.

எனவே, மாநிலத்‌ தகுதித்‌ தேர்வினை (செட்) தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலமே சிறப்பாகவும்‌ முறையாகவும்‌ நடத்தப்படும்‌.’’

இவ்வாறு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கோவி செழியன் தெரிவித்தார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
Embed widget