மேலும் அறிய

மதுரை விமான நிலைய விவகாரம்: கொள்கை முடிவு வேண்டும் - சு.வெங்கடேசன் !

கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய மத்திய அரசு வெறும் அறிவுரை கூறுவதும், கோரிக்கை வைப்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும். - மதுரை எம்.பி குற்றச்சாட்டு.

மதுரை சர்வதேச விமான நிலையம் கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.- மதுரை எம்.பி

சு.வெங்கடேசன் எம்பி தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

மதுரை விமான நிலையத்திலிருந்து கூடுதல் சர்வதேச விமானங்களை இயக்குவது மற்றும் ஆசிய நாடுகளுக்கான (ASEAN) விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடிதத்தின் முக்கிய விவரங்கள்: கடந்த 2025 நவம்பர் 21 அன்று, மத்திய சிவில் விமானபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுஅவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 ஆசியான்(ASEAN) நாடுகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ள இருதரப்புவிமான சேவை ஒப்பந்தத்தில் உள்ள 18 சுற்றுலாநகரங்களின் (Point of Call - POC) பட்டியலில் மதுரைவிமான நிலையத்தையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடியாக விமானங்களை இயக்க வழிவகுக்கும். தற்போது தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மட்டுமே இந்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஏர் ஆசியா, பாட்டிக் ஏர், சில்க் ஏர்போன்ற நிறுவனங்கள் 'திறந்தவெளி வானக் கொள்கையின்' (Open Skies Policy) கீழ் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிஅங்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் முரண்பாடுகள்: சர்வதேச விமான நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கு விமானங்களை இயக்க அனுமதி கோரிவருகின்றன. ஏப்ரல்-2013-ல், சிங்கப்பூர் விமானநிறுவனங்கள் மதுரைக்கு விமானங்களை இயக்க ஏதுவாக, மதுரையையும் புனேவையும் கூடுதல் விமான நிலையங்களாக (Points of Call) அங்கீகரிக்கக்கோரி சிங்கப்பூர் அரசு விடுத்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. இந்திய அரசு இதனை 'கொள்கை முடிவு' எனக் கூறிதொடர்ந்து மறுத்து வருகிறது.

வந்த வகையில் நியாயம்

சர்வதேச விமானங்களை இயக்கத் தொழில்நுட்ப ரீதியாகத் தகுதியற்ற கஜுராஹோ போன்ற உள்நாட்டு விமானநிலையங்களும், கடந்த 15 ஆண்டுகளாக ஆசியான் நிறுவனங்களால் ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத (Zero-Utilisation) அவுரங்காபாத், போர்ட் பிளேயர் போன்ற விமானநிலையங்களும் இந்தச் சிறப்புப் பட்டியலில் நீடிக்கின்றன. ஆனால், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஆழமான கலாச்சார மற்றும் வணிகத் தொடர்புகளைக்கொண்ட, அதிக தேவையுள்ள மதுரை விமான நிலையம் இந்தப் பட்டியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்? இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் கிஞ்சராபு நாயுடு, தற்போதைய நிலையே தொடரும் என்றும், இந்தக் கொள்கை ஒருமுறை எடுக்கப்பட்ட முடிவு என்பதால் மதுரையைச் சேர்ப்பதற்காக மாற்றியமைக்க முடியாதுஎன்றும் தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் நியதியல்ல.

கண்துடைப்பு

வளர்ந்து வரும் ஒரு நகரத்தின் தேவையை கணக்கில் கொள்ளாமல் மாற்றவே முடியாத கொள்கையை கொண்டதாக அரசு பதிலளித்துக் கொண்டிருப்பது பழமைவாத அணுகுமுறை மற்றும் அரசியல் காரணங்களை உள்ளடக்கியதாகும். சர்வதேச விமானச் சேவைகளைத் தொடங்குவது என்பது முழுக்க முழுக்க விமான நிறுவனங்களின் வணிக ரீதியான முடிவாகும். பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இருப்பு மற்றும் பொருளாதார ரீதியான லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே நிறுவனங்கள் இதனைத் தீர்மானிக்கின்றன. இதில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். “இருப்பினும், மதுரையின் முக்கியத்துவத்தைக் கருதி, அங்கிருந்து சர்வதேச விமானச் சேவைகளை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அனைத்து இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (Indian Carriers) ஒன்றிய அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக” அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதும், கோரிக்கை வைப்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget