மேலும் அறிய

Maan Ki Baat : ”ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும்" - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...!

ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Maan Ki Baat : ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மன் கி பாத்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி தொடக்கப்பட்டது. இதன் பின், அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் 11.30 மணி மணி வரை மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் உரையாற்றி வருகிறார் மோடி. 

இந்த மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் பிரதமர் மோடி.   அதன்படி, இன்றைக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.  அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளதாகல் இந்த வாரமே மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. 

"மழை நீரை சேகரிக்க வேண்டும்"

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ”பிபர்ஜாய் புயலால்  பாதிப்புகளை சந்தித்துள்ள கட்ச் மாவட்டம் விரைவில் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும். இயற்கை பேரிடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீள முடியும். தற்போது பருவமழை பல்வேறு இடங்களில் தொடங்கிய சூழலில், ஒவ்வொரு துளி மழை நீரையும் நாம் சேகரிக்க வேண்டும். நிர்வாகம் என்று வந்தால் நான் சத்ரபதி சிவாஜியை நினைவில் கொள்வேன். அவரிடம் ஏராளமான நிர்வாக திறன்களை கற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக நீர் மேலாண்மை மற்றும் கடற்படை  ஆகிவற்றில் அவரது பணியை இந்திய வரலாற்றில் இன்று வரை கொண்டாடப்படுகிறது” என்றார்.  மேலும், ”நூறு வருடங்களுக்கு முன்பாக சத்ரபதி சிவாஜி கட்டிய கோட்டைகள் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. பேரிடர் மேலாண்மை பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு பெரும் எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறது" என்றார்.

"காசா நோய் - பணிகள் தீவிரம்”

”வரும் 2025ம் ஆண்டிற்குள்  காசா நோயை முழுமையாக ஒழிக்கப்படும். அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவருக்கு காசா நோய் இருந்தால் அவர்களது குடும்பமே அவர்களை விட்டு தள்ளி இருக்கும் நிலை இருந்தது. தற்போது இத்தகைய நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஒரு சில இடங்களில் காசா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை இளைஞர்கள் சிலர் செய்து வருகின்றனர்.  கிட்டதட்ட 50 ஆயிரம் இளைஞர்கள் காசா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இதுபோன்று காசநோயை ஒழிப்பதற்கு இளைஞர்கள் உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது”  என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். 

"ஒரு குடும்பம் ஒரு உலகம்"

தொடர்ந்து பேசிய அவர், "ஜூன் 21ஆம்  தேதி யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை ’ஒரு உலகம் ஒரு குடும்பம்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் யோகா தினம் கொண்டாட்டப்படுகிறது. நாடு முழுவதும் அன்றைய தினம் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  நான் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள யோகா தினத்தில் நான் பங்கேற்கிறேன்.

சமூக ஊடங்களில் இதை பற்றிய மிகப்பெரிய ஆர்வத்தை பார்க்கிறேன். யோகாவை உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget