மேலும் அறிய

2024இல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கே பேரழிவு… நிர்மலா சீதாராமன் கணவர் தடாலடி!

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்படும் பிரபாகர், மக்களிடையே மறைந்திருக்கும் பிளவு உணர்வுகளை வரவழைப்பதில் பிரதமர் மோடி மிகவும் திறமையானவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பொருளாதார நிபுணரும் சமூக விமர்சகருமான டாக்டர். பரகலா பிரபாகர், மோடி அரசாங்கத்தை விமர்சித்து, பிரதமர் பொருளாதாரத்தை மெத்தனமாக கையாள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் கணவர்

டாக்டர் பிரபாகரின் புதிய புத்தகமான 'The Crooked Timber of New India: Essays on A Republic in Crisis' (ஸ்பீக்கிங் டைகர் வெளியீடு) பெங்களூரில் வெளியிடப்பட்டது. இது மோடி அரசாங்கத்தின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிறவற்றைக் கையாளும் விஷயங்கள் தொடர்பான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்படும் பிரபாகர், மக்களிடையே மறைந்திருக்கும் பிளவு உணர்வுகளை வரவழைப்பதில் பிரதமர் மோடி மிகவும் திறமையானவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் அவர் தனது உறுதியான கருத்தை தெரிவித்தார்.

2024இல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கே பேரழிவு… நிர்மலா சீதாராமன் கணவர் தடாலடி!

மீண்டும் மோடி வந்தால் பேரழிவு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டம் பெற்ற பிரபாகர், நிர்மலா சீதாராமனை மணந்தார். 2014 தேர்தலில் 'வளர்ச்சி' என்ற போர்வையில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா (பாஜக) மூலம் இந்துத்துவம் தந்திரமாக கடத்தப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். இது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார நிபுணர் பிரபாகர் கூறியுள்ளார். 2024-ல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால், அது பேரழிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் பெரும் புகழுக்குக் காரணம், மக்களைத் திரட்டும் திறமையால் மட்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: Pakistan PM President Salary : ஜனாதிபதி, பிரதமருக்கு இவ்வளவுதான் சம்பளமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட குறைவாம்...!

இந்துத்துவாவை புகுத்தும் யுக்தி

2014 ஆம் ஆண்டில், நரேந்திர மோடியும் பாஜகவும் நல்லாட்சி, தூய்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் மற்றும் 'வளர்ச்சி' என்று வாக்குறுதி அளித்து வாக்கு கேட்டதை டாக்டர் பிரபாகர் நினைவு கூர்ந்தார். இந்துராஷ்டிராவை (இந்து தேசம்) உருவாக்கி, இந்துத்துவ சக்திகளை கட்டவிழ்த்து விட வேண்டும் என்ற அவர்களின் உண்மையான நோக்கம் குறித்து தற்போது தேசம் நம்பிக்கை கொள்ளவில்லை, என்றார். வளர்ச்சி என்ற பெயரை பயன்படுத்தி இந்துத்துவாவை தேசத்தின் மீது அவிழ்த்து விட முயற்சிக்கிறது பாஜக. இதைத்தான் பாஜகவும் மோடியும் நிலைநிறுத்துகிறார்கள் என்றால், அவர்கள் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2024இல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கே பேரழிவு… நிர்மலா சீதாராமன் கணவர் தடாலடி!

நிர்மலா சீதாராமனை குறை கூறுகிறாரா?

மறைந்த அருண் ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நிதியமைச்சர்கள் என்று குறிப்பிடுகிறீர்களா என்ற தாப்பரின் கேள்விக்கு, அவர் தனிநபர்களைப் பற்றி பேசவில்லை என்று கூறினார். அப்படியென்றால் ஏன் நரேந்திர மோடியின் பெயரைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, பதறாமல் பொறுமையாக டாக்டர் பிரபாகர், அது ‘மோடி ஆட்சி’ என்பதால்தான். பிரதமர் மோடிதானே பொறுப்பு என்று பதிலளித்தார். பொருளாதாரத்தில் சில அடிப்படைப் பயிற்சி பெற்ற எந்தவொரு பொருளாதார நிபுணரும், இவ்வளவு பெரிய அளவிலும், குறுகிய அறிவிப்பிலும் பணமதிப்பிழப்பை பரிந்துரைத்திருக்க மாட்டார்கள் என்று அவர் வாதிட்டார். இது ஒரு மாபெரும் தவறு, அதைத் தொடர்ந்து வந்த தவறான கொள்கைகள் அந்தத் தவறை அதிகப்படுத்தி நெருக்கடியை அதிகப்படுத்தியது என்று டாக்டர் பிரபாகர் விமர்சித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் ராஜஸ்தான்; பவுலிங்கில் கெத்து காட்டும் பஞ்சாப்!
RR vs PBKS LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் ராஜஸ்தான்; பவுலிங்கில் கெத்து காட்டும் பஞ்சாப்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் ராஜஸ்தான்; பவுலிங்கில் கெத்து காட்டும் பஞ்சாப்!
RR vs PBKS LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் ராஜஸ்தான்; பவுலிங்கில் கெத்து காட்டும் பஞ்சாப்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget