மேலும் அறிய

உபெர் ஓட்டுநரின் மனிதத்துவம்.... மொழித்தடையை தாண்டி கனிவுடன் நடத்தினார்... இணையத்தில் லைக்ஸ் அள்ளும் நெகிழ்ச்சிப் பதிவு!

”50களில் நடைபோடும் இந்த சராசரி மனிதர் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். இந்த வேகமான அவசர வாழ்க்கையில் எங்கோ மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது"

உபெர் ஓட்டுநர் குறித்த லிங்க்ட்இன் பயனர் ஒருவரின் நெகிழ்ச்சியூட்டும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காலை கண் விழிப்பது முதல் தூங்கச்செல்லும் வரை பரபரவென்று எதையோ தேடியபடி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில் நம் வீட்டு நபர்களின் அருகில் அமர்ந்து பேசுவதற்கும் அவர்களுடன் உண்டு மகிழ்ந்திருப்பதற்கும்கூட நேரம் செலவிட முடிவதில்லை.

நகர வாழ்க்கை வேறு வழியே இல்லாமல் நம்மை இன்னும் சுயநலன் சார்ந்து சிந்திக்க வைத்து  ஓட வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மொழித்தடை தாண்டி கனிவு

இத்தகைய பரபரப்பான நகர சூழலில் தான் சந்தித்த தன்னலமற்ற உபெரர் ஓட்டுநர் குறித்து  ஹர்ஷ் ஷர்மா எனும் லின்க்ட் இன் பயனர் எழுதியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது. 

பெங்களூரில் அவரது வண்டியில் பயணித்த ஒரே காரணம் தவிர்த்து முன்பின் தெரியாத தன்னிடம் ரவி எனும் உபெர் ஓட்டுநர் காட்டிய அன்பு குறித்து ஹர்ஷ் சர்மா பதிவுட்டுள்ளார்.

"இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் நபர்,  எனது உறவினரோ, நண்பரோ அல்லது இச்சம்பவம் நிகழும் வரை நாங்கள் தெரிந்தவர்கள் இல்லை.

எங்களுக்குள் மொழித் தடை இருந்தது, அதனால் பிற ஓட்டுநர்கள் போல் தெரிந்தவர்களுடன் செல்போனில் பேசியபடி அவர் பயணிக்கவில்லை. நான் விமானத்தில் வந்து இறங்கியதால் சரியாக தூங்காததை அவர் கண்டுகொண்டார்.

நான் படுக்க இருக்கைகளை ஏற்பாடு செய்தார். தொடர்ந்து காலை உணவு பற்றி கேட்டார். நான் சாப்பிடவில்லை என சொன்னதை அடுத்து என்னை தூங்குமாறும், நல்ல உணவகம் ஒன்றில் வண்டியை நிறுத்தி எழுப்பி விடுவதாகவும் சொன்னார்.

நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவர் என்னை எழுப்பினார். நாங்கள் மிகவும் நெரிசலான உணவகம் ஒன்றுக்கு சென்றோம். அவர் எனக்காக ஒரு டேபிள் ஏற்பாடு செய்தார்.செல்ஃப் சர்வீஸ் உணவகத்திலும்  மெனுவை என்னிடம் கொண்டு வந்து தென்னிந்தியாவின் சில சிறந்த உணவுகளை பரிந்துரைத்தார்.


உபெர் ஓட்டுநரின் மனிதத்துவம்.... மொழித்தடையை தாண்டி கனிவுடன் நடத்தினார்... இணையத்தில் லைக்ஸ் அள்ளும் நெகிழ்ச்சிப் பதிவு!

ஒரு மணி நேரம் முன் தான் அவரை சந்தித்திருப்பேன், ஆனால் என்னை அவர் சாப்பாட்டு மேசையை விட்டு எழவிடவில்லை,  என்னை தனது மகனைப் போல் நடத்தினார். 

50களில் நடைபோடும் இந்த சராசரி மனிதர் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். இந்த வேகமான அவசர வாழ்க்கையில் எங்கோ மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது" என உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஹர்ஷ் ஷர்மாவின் இந்தப் பதிவு 30,000 லைக்குகளைப் பெற்று லிங்க்ட் இன்னில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், நெட்டிசன்கள் நெகிழ்ச்சி கமெண்டுகளையும், தாங்கள் சந்தித்த இதுபோன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.