மேலும் அறிய

Karnataka: ரோட்டுவாக்குல ரெண்டு காதல்!? ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள்!

அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார். இதுதான் இந்த சண்டைக்கு காரணம் என கூறுகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகழ்பெற்ற தனியார் பள்ளியான பிஷப் காட்டன் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சிலர் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போது கடும் வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக தாக்குகிறார். பின்பு பேஸ்பால் மட்டைகளை கொண்டு அடித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு இரும்பு கதவுகளில் தலையை கொண்டுபோய் மோத செய்து சரமாரியாக தாக்கிக்கொள்வது வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர், சிறிது நேரத்தில் அங்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது. சிலர் மாணவிகளை தடுக்க முயன்றும், மாணவிகள் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

Karnataka: ரோட்டுவாக்குல ரெண்டு காதல்!? ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள்!

சிலர் இந்த சண்டையை வேடிக்கை பார்த்ததோடு செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். மக்கள் கூட்டத்தையோ, தங்களை வீடியோ எடுப்பதையோ மாணவிகள் யாரும் கண்டுகொள்ளாமல் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒருவரை ஒருவர் தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். 

வெகுநேரத்துக்கு பின்னர் பொதுமக்களில் சிலர் அவர்களை விலக்கிவிட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால் மாணவிகள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோவில் ஒரு மாணவி தாக்கப்பட்டதில் மூக்கு உடைந்து ரத்தம் ஊற்றுகிறது. அந்த பெண்ணுடைய ஆண் நண்பர் எனக்கூறப்படும் ஒரு மாணவர் வந்து அந்த பெண்ணை பாதுகாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இதுவரை இதுகுறித்து விளக்கமளிக்கவில்லை.

Karnataka: ரோட்டுவாக்குல ரெண்டு காதல்!? ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள்!

இது தொடர்பாக போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியபோது, சண்டையில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகிகள் தரப்பில் போலீசாரிடம் கூறப்பட்டது. காதலனுக்காக 2 மாணவிகள் மோதிக்கொண்டதாக தெரிகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார். இதுதான் இந்த சண்டைக்கு காரணம் என கூறுகிறார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக மாணவிகள் இரண்டு பேரும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு மோதியுள்ளனர். அதற்கு பிறகே நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என கூறினாலும் கூட பலர் அதை பின்பற்றுவது இல்லை. கொரோனா காலத்தில் இணையவழி கல்விக்காக மாணவர்கள் செல்போன் பயன்படுத்திய நிலையில் அதனை தற்போது பள்ளி வகுப்பறைக்கும் எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர். இது மாணவர்களின் கல்வி கற்கும் திறனை பாதிக்கும். எனவே மாணவ-மாணவிகளிடையே ஒழுக்கத்தை போதிக்கவும், ஒழுங்கீனங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget