மேலும் அறிய

எலிகளைப் பிடிக்க ரூ.19.34 லட்சம்..போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பாக வந்த பூனைகள்!

நன்றாக இருக்கும் வீட்டைப் பிரித்து பதம் பார்ப்பதில் எலிகள் தனி ரகம். பேப்பர் தாள் முதல் வீட்டில் உள்ள பொருட்கள் வரை நாசம் செய்து வைத்திருக்கும்.

கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் எலிகள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவமும், அதற்கு போலீசார் எடுத்த நடவடிக்கையும் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

பொதுவாக ஒவ்வொரு உயிரினங்களாலும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொல்லை ஏற்படும். அதில் எலிகளை பற்றி சொல்லவே வேண்டாம். நன்றாக இருக்கும் வீட்டைப் பிரித்து பதம் பார்ப்பதில் எலிகள் தனி ரகம். பேப்பர் தாள் முதல் வீட்டில் உள்ள பொருட்கள் வரை நாசம் செய்து வைத்திருக்கும். அதனை கட்டுப்படுத்த சில வீடுகளில் பூனைகள் வளர்க்கப்படுவது வழக்கம். அதேசமயம் எலிகளை கொல்ல மருத்து போன்றவையும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனிடையே கர்நாடகாவில் உள்ள கௌரிபிதனூர் கிராமப்புற காவல் நிலைய வளாகத்தில் இரண்டு பூனைகள் வளர்க்கப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் எதற்கு பூனைகள் என மக்கள் குழம்பிய நிலையில், அதற்கான காரணத்தை கௌரிபிதனூர் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய் குமார் விளக்கியுள்ளார். அதாவது பெங்களூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த போலீஸ் ஸ்டேஷன் கடந்த  2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இதற்கு அருகில் ஏரி உள்ள நிலையில், அங்கு உலவும் எலிகள் தங்குவதற்கு சிறந்த இடமாக தங்களது போலீஸ் ஸ்டேஷன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எலிகளால் முக்கியமான கோப்புகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் பூனைகளைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டியிருப்பதாகவும் விஜய் குமார் கூறியுள்ளார். இதனையடுத்து முதலில் ஒரு பூனையை விலைக்கு வாங்கி ஸ்டேஷனில் வளர்த்துள்ளனர். இதனால் எலிகளின் தொல்லை குறைந்துள்ளதால் இரண்டாவதாக மற்றொரு பூனையும் வாங்கப்பட்டுள்ளது. 

இதுவரை 3 எலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 பூனைகளும் காவல் நிலையத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள பல துறைகள் எலி மற்றும் கொசு தொல்லையை தடுக்க ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா தேர்வுகள் ஆணையம் எலி மற்றும் கொசு தொல்லையைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் செலவழிப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக கிடைத்துள்ளது. இதேபோல் 2010-2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் எலிகளைப் பிடிப்பதற்காக மாநில அரசு ரூ.19.34 லட்சத்தைச் செலவிட்டது  குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget