மேலும் அறிய

உச்சக்கட்ட பதற்றம்...தொடரும் எல்லை பிரச்னை...கர்நாடக, மகாராஷ்டிரா எல்லையில் நடப்பது என்ன?

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்து இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் பிரச்னை வெடிக்க காரணமாக அமைந்துள்ளது.

கர்நாடகாவும் மகாராஷ்டிராவும் அண்டை மாநிலங்களாக உள்ளன. கடந்த 1956ஆம் ஆண்டு, மாநில மறுசீரமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்தே, இரு மாநில எல்லையில் அமைந்துள்ள பெல்காவி, கர்நாடகவின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆனால், அந்த காலத்தில் இருந்தே, கர்நாடக, மகாராஷ்டிராவுக்கு இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இந்த எல்லை பிரச்னையில் மையமாக பெல்காவி உள்ளது.

இச்சூழலில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்து இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் பிரச்னை வெடிக்க காரணமாக அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஜாத் தாலுகாவை கர்நாடகாவின் ஒரு பகுதியாக இணைக்க கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளதாக அவர் பேசியிருந்தார்.

இதற்கு, மகாராஷ்டிரா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இரு மாநில அரசுகளுக்கிடையே எல்லை பிரச்னை வெடித்தது. கடந்த ஒரு மாதமாக, இரு மாநிலங்களுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். 

கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சட்டப்பேரவையின் கடைசி குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதற்கு மத்தியில், மகாராஷ்டிரா தலைவர்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டருப்பது பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஹசன் முஷ்ரிப் மற்றும் சிவசேனாவின் கோலாப்பூர் மாவட்டத் தலைவர் விஜய் தேவனே ஆகியோர் இன்று கர்நாடகாவின் பெலகாவியில் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

300க்கும் மேற்பட்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை எல்லையில் நிறுத்தி கர்நாடகா காவல்துறை திருப்பி அனுப்பியது. மேலும் சிலரை மகாராஷ்டிர போலீசார் கைது செய்தனர்.

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சினையை எழுப்பி வரும் மத்தியவர்த்தி மகாராஷ்டிர ஏகிகரன் சமிதி (எம்எம்இஎஸ்) என்ற அமைப்பினர், கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக மாபெரும் போராட்டங்களைத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பிரதமர் மோடி இந்தியாவை பிரிக்க முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மத்திய அரசால்தான் எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மகாராஷ்டிராவை பிரிக்க விரும்புகிறார்.

முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெற்ற பிறகும், தலைவர்கள் ஏன் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை? இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்.

இந்த எல்லை பிரச்னையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, இது தொடர்பான தங்களின் கோரிக்கைகளை எழுப்ப போவதில்லை என இரு மாநில முதலமைச்சர்களும் ஒப்பு கொண்டதாக கடந்த வாரம் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமித் ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Embed widget