மேலும் அறிய

IAF MiG 29K Fighter Jet Crash: விபத்துக்குள்ளானது மிக் 29K ரக போர் விமானம்.. விமானி உயிரோடு மீட்பு…

விரைவாக செய்யப்பட்ட SAR ஆபரேஷன் நடவடிக்கைக்கு பிறகு விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். விமானியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறால், கோவா கடல்பகுதியில் வழக்கமான பயணத்தின்போது இந்தியப் போர் விமானம் விபத்திற்குள்ளானது.

போர் விமானம் விபத்து

கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29K ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை மேற்கொண்டது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படை விமானியை உயிருடன் மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, விமானியின் உடல்நிலை சீராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கடற்படை ட்வீட்

இந்த சம்பவம் கடற்படையால் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கோவாவிற்கு அப்பால் கடலில் வழக்கமான பயணத்தில் ஈடுபட்டிருந்த MiG 29K விமானம் தளத்திற்குத் திரும்பும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்திற்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். விரைவாக செய்யப்பட்ட SAR ஆபரேஷன் நடவடிக்கைக்கு பிறகு மீட்கப்பட்டார். விமானியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது," என்று இந்திய கடற்படை ட்வீட் செய்தது.

தொடர்புடைய செய்திகள்: ஆர்டர் செய்தது கைக்கடிகாரம்; வந்ததோ மாட்டு சாணம் - ஃபிலிப்கார்ட் சேவையால் கொந்தளித்த பெண்மணி

விசாரணை வாரியம் அமைப்பு

இந்த சம்பவத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் (BoI) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில், இதுவும் கடுமையான வானிலையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் விசாரணை வாரியம் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் கூடிய விரைவில் இதற்கான காரணம் தெரிய வரும். கடந்த வார தொடக்கத்தில், சீன எல்லையில் உள்ள இந்தியாவின் இறுதிப் புறக்காவல் நிலையங்களில் ஒன்றான தவாங்கில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரின் விமானி ஒருவர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

IAF MiG 29K Fighter Jet Crash: விபத்துக்குள்ளானது மிக் 29K ரக போர் விமானம்.. விமானி உயிரோடு மீட்பு…

தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்

"தவாங் அருகே முன்னோக்கி பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் அக்டோபர் 05 அன்று காலை 10 மணியளவில் வழக்கமான பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்” என்று இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் அப்போது வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. பின்னர், இறந்த விமானி லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் என்று ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில், அருணாச்சலப் பிரதேசத்தில் பல ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்த விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு கடுமையான வானிலையே முதன்மைக் காரணம். வடகிழக்கு மாநிலத்தில் 6 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 2010ல் இருந்து கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ராணுவத்தின் இரண்டாவது சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்ததுடன், துணை விமானிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget