மேலும் அறிய

இந்திய மருந்தை பயன்படுத்தியதால் விபரீதம்? சிகிச்சை பெற்று வந்தவர் மர்ம மரணம்...காம்பியாவை தொடர்ந்து இலங்கையில் அதிர்ச்சி..!

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தரமற்று இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் உஸ்பெக்கிஸ்தானிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையில் அதிர்ச்சி:

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, இலங்கையில் நடந்துள்ள சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டி மாவட்டத்தில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட புபிவாக்கைன் என்ற மயக்க மருந்தை செலுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்தி உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஏப்ரல் மாத சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மருந்தின் பயன்பாட்டைக்கு இலங்கை சுகாதார அமைச்சகம் தற்காலிக தடை விதித்தது. இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னரே, பதிவு செய்யப்படாத விநியோக நிறுவனத்திடமிருந்து மருந்துகளை வாங்க இலங்கை அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்திய மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் இலங்கை:

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை விரைவாக இறக்குமதி செய்ய அனுமதி பெறுவதற்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரத்தில் தேசிய மருந்து கட்டுப்பாட்டாளரின் பங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.

குஜராத்தைச் சேர்ந்த Savorite Pharmaceuticals (Pvt) Limited மற்றும் சென்னையைச் சேர்ந்த Kausik Therapeutics ஆகியவை பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம், வழக்கைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி, இந்த நிறுவனங்களின் இறக்குமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

பல ஆண்டுகளாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளைதான் இலங்கை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு, இறக்குமதி செய்யப்பட்ட மொத்த மருந்துகளில் கிட்டத்தட்ட 50 சதவிகித மருந்துகள் இந்தியாவிலிருந்து சென்றுள்ளன. அதன் மதிப்பு மட்டும் 450 மில்லியன் டாலர்களாகும். கடந்தாண்டு இலங்கை நடந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது, இந்தியாவுடனான வர்த்தக உறவு மேலும் முக்கியத்துவம் பெற்றது.

குறிப்பாக, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் பற்றக்குறை காரணமாக இலங்கை தவித்த வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அங்கு அதிக மருந்துகள் சென்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget