மேலும் அறிய

Defence Ministry Explanation: இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடுத்ததால், இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா, பாரமுல்லா உள்ளிட்ட பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ராணுவம் தள்ளப்பட்டதாக, ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது என்ன.? பார்க்கலாம்...

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறி அல்ல என இந்தியா ஏற்கனவே விளக்கம்

இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்குவதற்காக நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும், போரை நோக்கிய நகர்வு ஏதும் இல்லை என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறி வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு சொன்னதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் ஏதும் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7-ம் தேதி இரவு, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிரித்ஸர், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, பதின்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் புஜ் ஆகிய இடங்களை குறி வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தாக்குதல்களை ஏவுகணை தடுப்பு அமைப்பை வைத்து முறியடித்ததாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை நிரூபிக்கும் வகையில், தாக்குதல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை, இந்திய ராணுவம், பாகிஸ்தானின் வான் தற்காப்பு ராடார்கள் மற்றும் அமைப்புகளை குறி வைத்து பல இடங்களில் தாக்கியதாகவும், பாகிஸ்தான் எந்த அளவிற்கு தாக்குதல் நடத்தியதோ, அதே அளவில்தான் இந்திய ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அந்த தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாகவும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உள்பட 16 அப்பாவி உயிர்களை பறித்த பாகிஸ்தான் ராணுவம்

இதனிடையே, கனரக பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியதாகவும், அதில், 3 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 16 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே, பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்தும் விதமாக இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

இப்போதும் கூட, போரை நோக்கி சூழ்நிலையை நகர்த்திச்  செல்ல மாட்டோம் என்று இந்திய ராணுவத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும், ஆனால், அது இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் ராணுவம் மதிக்கும் வரைதான் என்றும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது இந்திய ராணுவ அமைச்சகம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget