மேலும் அறிய

கத்தாருக்கு செல்லும் பதான்கோட் லிச்சி பழங்கள்.. ஏற்றுமதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, கடந்த ஜூன் 23ஆம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைத்துள்ளது.

கத்தாருக்கு செல்லும் பதான்கோட் லிச்சி பழங்கள்:

கூடுதலாக, பதன்கோட்டிலிருந்து துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 0.5 மெட்ரிக் டன் லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. லிச்சிப் பழங்களின் ஏற்றுமதி மூலம் நாட்டின் தோட்டக்கலை விளைபொருட்களுக்கு உலக அளவிலான சந்தை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வேளாண் விளைபொருள்களின் ஏற்றுமதி விவசாயிகளுக்கு வருவாயையும் சந்தை வாய்ப்புகளையும் கணிசமான அளவில் உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா:

கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பஞ்சாபில் உற்பத்தி செய்யப்பட்ட லிச்சிப் பழங்கள் 71,490 மெட்ரிக் டன்களாக இருந்தது. இது, நாட்டின் மொத்த லிச்சி உற்பத்தியில் 12.39 சதவிகிதமாக உள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியா 639.53 மெட்ரிக் டன் லிச்சிப் பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தேசிய தோட்டக்கலை வாரியம் தெரிவித்துள்ளது.

4,327 ஹெக்டேர் பரப்பளவில் லிச்சிப் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 16,523 கிலோ மகசூல் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த வாரியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2024-25-ம் நிதியாண்டில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி 3.87 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5.67% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாம்பழங்கள், வாழைப்பழங்கள், திராட்சைகள், ஆரஞ்சுகள் பழ வகைகளின் ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் அதே வேளையில், செர்ரி, ஜாமூன் மற்றும் லிச்சிப் பழங்கள் தற்போது சர்வதேச சந்தைகளில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget