மேலும் அறிய

Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!

India First Bullet Train Project: மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் 2026-ல் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2033-ல்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் காரிடார் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இது நாட்டின் ரயில் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் தொழில்நுட்பத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும்

ஜப்பான் நாட்டின் ஷிங்கான்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மணிக்கு 320 – 350 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும் என்று கூறப்பட்டது. இது மும்பை மற்றும் அகமதாபாத் இடையில் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கு இடையிலான 508  கி.மீ. தூரத்தை விரைவில் கடக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் ரயில் பயணத்தை மறு வரையறை செய்து, வேகம், செயல்திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு

இந்த நிலையில், 2024- 25அம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 255 கி.மீ. தூர பால (viaducts) பணிகள் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் வதோதரா அருகே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனந்த், பருச், சூரத், வாபி மற்றும் பிலிமோரா உள்ளிட்ட பல முக்கிய நிலையங்கள் மேம்பட்ட வளர்ச்சி நிலைகளில் உள்ளன.


Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!

2033-ஆம் ஆண்டில்தான் பயன்பாடு

முன்னதாக, புல்லட் ரயில் பணிகள் 2026-ல் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 2030ஆம் ஆண்டில்தான் மும்பை- அகமாதாபாத் புல்லட் ரயில் அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் 2033-ஆம் ஆண்டில்தான் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதத்துக்கு என்ன காரணம்?

நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள், கொள்கை ஒப்புதல்கள் மற்றும் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த தாமதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் 2047ஆம் ஆண்டுக்குள் 7,000 கி.மீ அதி வேக ரயிலை செயல்படுத்துவதற்கான நீண்டகால தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது. எதிர்கால வழித்தடங்களுக்கு இந்த முதல் புல்லட் ரயில் திட்டம் மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget