மேலும் அறிய

Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!

India First Bullet Train Project: மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் 2026-ல் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2033-ல்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் காரிடார் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இது நாட்டின் ரயில் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் தொழில்நுட்பத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும்

ஜப்பான் நாட்டின் ஷிங்கான்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மணிக்கு 320 – 350 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும் என்று கூறப்பட்டது. இது மும்பை மற்றும் அகமதாபாத் இடையில் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கு இடையிலான 508  கி.மீ. தூரத்தை விரைவில் கடக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் ரயில் பயணத்தை மறு வரையறை செய்து, வேகம், செயல்திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு

இந்த நிலையில், 2024- 25அம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 255 கி.மீ. தூர பால (viaducts) பணிகள் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் வதோதரா அருகே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனந்த், பருச், சூரத், வாபி மற்றும் பிலிமோரா உள்ளிட்ட பல முக்கிய நிலையங்கள் மேம்பட்ட வளர்ச்சி நிலைகளில் உள்ளன.


Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!

2033-ஆம் ஆண்டில்தான் பயன்பாடு

முன்னதாக, புல்லட் ரயில் பணிகள் 2026-ல் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 2030ஆம் ஆண்டில்தான் மும்பை- அகமாதாபாத் புல்லட் ரயில் அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் 2033-ஆம் ஆண்டில்தான் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதத்துக்கு என்ன காரணம்?

நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள், கொள்கை ஒப்புதல்கள் மற்றும் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த தாமதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் 2047ஆம் ஆண்டுக்குள் 7,000 கி.மீ அதி வேக ரயிலை செயல்படுத்துவதற்கான நீண்டகால தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது. எதிர்கால வழித்தடங்களுக்கு இந்த முதல் புல்லட் ரயில் திட்டம் மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
US Iran Peace Deal Impact: ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?
ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
TN BY-Election: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
ADMK vs TVK : அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
கோயில் பூஜை பொருள் விற்பனைக்கு புது விதிகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
கோயில் பூஜை பொருள் விற்பனைக்கு புது விதிகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
Embed widget