Coronavirus LIVE Updates: கேரளாவில் 5 வது நாளாக 20 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா. இன்று 20624 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் - இன்று மட்டும் 80 பேர் உயிரிழப்பு
5 லட்சம் கோவிஷீல்டு டோஸ் சென்னை வந்தன
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ் சென்னை வந்தன. புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு தடுப்பூசி டோஸ் வந்தன.




















